மாவட்ட ஆட்சியர்கள் மாதம் 10 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்-ஜெ.ராதகிருஷ்ணன்..

சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர், ஜெ.ராதகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித் அவர், ” எனக்கு தமிழக முதல்வரின் எண்ணமும் முழுமையாக தெரியும். விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான சுதந்திரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்ய நாங்களே நேரடியாக செல்லப் போகிறோம்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் நெல் கொள்முதல் நடக்கிறது. இனி அடுத்த சீசன் அக்டோபர் மாதம், மற்றும் இடையில் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். விவசாயிகள், அரசு, மக்கள் மூன்று தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக முதல்வர் எப்போதுமே புதிய முயற்சிகள், புதிய உத்திகளுக்கு ஊக்கமளிப்பார்கள். அந்த வகையில், ஏழை எளிய மக்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய ரேசன் கடைகளில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஒருபுறம். மற்றொருபக்கம் 92 அமுதம் ஸ்டோர்ஸ் அரசால் நடத்தப்படுகிறது. அங்கு சில பொருட்கள் லாபகரமாகவும், சில பொருட்கள் நட்டமாகவும் விற்பனையாகிறது. எனவே அங்கும் தரமான பொருட்களை விற்பனை செய்தால், மக்கள் தனியார் கடைகளுக்குச் செல்லாமல் அரசு நடத்தும் கடைகளுக்கு வருவர். விவசாயிகளைப் பொருத்தவரை தேவைக்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும். தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம், 10 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர்கள் குறைந்தபட்சம் 20 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து எங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

சென்னையைப் பொருத்தவரை இணை ஆணையர்கள் 30 கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆந்திரா உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். .

814675 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories