எழும்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய பழமையான நீராவி ரெயில் என்ஜின்..

Published:

FB IMG 1660562647125 - 2026

75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பழமையான நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் ரெயில் நிலையம் இடையே பழமையான நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது.

இந்த நீராவி ரெயில் என்ஜினை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், எழும்பூர்-கோடம்பாக்கம் ரெயில் நிலையம் இடையே இயக்கப்பட்ட நீராவி ரெயில் என்ஜினை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img