மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பலி: சென்னையில் பரிதாபம்

Published:

சென்னை:
சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால், 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் அஜய் விடுமுறை தினமான ஞாயிறு நேற்று தனது தாய் தந்தையருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது அறுந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மாஞ்சா நூல் சிறுவன் அஜயின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
ஆனால் சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாஞ்சா நூலை பயன்படுத்தியவர்களை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை நகரில் மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட ஏற்கெனவே தடை உள்ளது. இருப்பினும், இந்தத் தடை முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img