சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. மாநில அரசு குளிர் பதனக் கிடங்குகள் அமைத்து விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜிகே..நாகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கடுமையான வறட்சியினாலும்,நீர்ப்பற்றாக்குறையினாலும் கொங்குமண்டல விவசாயிகள் நீண்டகால பயிர்களான வாழை,நெல் ஆகியவற்றுக்குப் பதிலாக குறுகியகால(90 நாட்கள்) சின்ன வெங்காயம்,தக்காளி போன்ற பயிர்களை பயிரிட துவங்கிவிட்டனர். ஏற்கனவே சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.தற்போது சின்ன வெங்காயம் ரூ.9க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.ஆனால் விவசாயிகளின் உற்பத்திசெலவு ஆட்கள் கூலி,உரம் உட்பட ரூ.10 செலவு ஆகிறது. அதேபோல,பொள்ளாச்சிப்பகுதியில் கூடை,கூடையாக தக்காளிப்பழங்கள் ரோட்டிலும், சுடுகாட்டிலும் கொட்டப்பட்டன.எனவே மாநில அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும்,விளைநிலத்தில் பாடுபட்டு விளைவித்த காய்கறிகள் வீணாகுவதை தடுக்கவும், தடையில்லா மின்சாரத்துடன் கூடிய குளிர்பதனக்கிடங்குகளை கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்புக்கு விடை காண கொ.ஜ.க கோரிக்கை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

