திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயம்..

திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயமானதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக‌ கூறினர்.

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி சண்முகபிரியா (30). இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் அவிநாசி சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திருமுருகன் பூண்டியில் இருந்து ஆத்துப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சண்முகபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சன்முகபிரியாவின் கணவர் தியாகராஜன் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு தியாகராஜன் மற்றும் உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்ததாக கம்மல் மற்றும் தோடு ஆகியவை தியாகராஜனிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், சண்முகபிரியா தாலிக்கொடி மற்றும் மூன்றரை பவுன் செயின் அணிந்து இருந்ததாகவும் அவை எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் ஒருவரை நேற்றிரவு கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை அவரை அனுப்பி விட்டதாகவும் லாரி எங்கே இருக்கிறது. கைது நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை என்பது குறித்த தகவலையும் காவல்துறையினர் கூற மறுப்பதாகவும் நகைகள் காணவில்லை என்பதை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட போலீசார் மறுப்பதாகவும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விபத்தில் உள்ள சந்தேகங்களை காவல்துறையினர் தீர்க்கும் பட்சத்தில் உடலை பெற்றுக் கொள்வதாகவும் கூறி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நகைகள் மாயம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

156076 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories