கட்சி தொடங்காத ரஜினி! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து… வேறு கட்சிகளில் இணைந்த மக்கள் மன்றத்தினர்!

krishnagiri rajini makkalmandram - 2026

நடிகர் ரஜினி காந்த் இரு வருடங்களுக்கு முன்னர் தாம் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் சுறுசுறுப்படைந்தனர். ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் என பெயர் பெற்றது. இதை அடுத்து, மக்கள் மன்றத்தில் இணைய பலரும் ஆர்வம் காட்டினர்.

அரசியலில் உள்ளூர் வட்ட மாவட்டப் பொறுப்புகளில் அமர்ந்தால், ஏதோ நாலு காசு சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பொதுவாகவே பலருக்கும் உண்டுதான். ஆனால், இதோ இதோ என்று போக்குக் காட்டி வந்த ரஜினி, மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையிலும் கூட அரசியல் களத்தில் குதிக்காமல், குளத்தின் கரையில் நின்றபடி கல்லெறிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது நடிகர் அவதாரம் எடுத்து அந்தக் குளத்து நீரில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம், அரசியல் ஆசை இருந்தால், மக்கள் மன்றத்தில் இருக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோளும் விடுத்தார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
krishnagiri rajini makkalmandram1 - 2026

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து எவ்வளவு வேகத்தில் இணைந்தார்களோ அவ்வளவு வேகத்தில் வெளியேறி வருகின்றனர் அரசியல் ஆசையுடன் இணைந்தவர்கள். நேற்று திமுகவில் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் இணைந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக கலைந்தது ரஜினி மக்கள் மன்றம்!

மன்றத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் உட்பட 500 பேருடன் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ரஜினிகாந்த் பிறந்த நாச்சிகுப்பம் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ரஜினி மக்கள் மன்றம் கலைய துவங்கி உள்ளது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அடுத்த முக்கிய நிர்வாகி அதிமுகவிற்கு தாவலாம் என்ற தகவல் மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.

WhatsApp Image 2019 02 08 at 21.13.31 - 2026

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்து வந்த மதியழகன் ரஜினி மக்கள் மன்றத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து உடனடி நீக்கப்பட்டிருக்கிறார்.

மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு இன்று முதல் அன்பு தலைவரின் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார். நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று விஎம் சுதாகர் நிர்வாகி கையெழுத்திட்டு ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டது!

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories