திருச்சுழி, காரியாப்பட்டி தாலுகாக்களில் குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு!

thiruchuzhi pwd works inspection
thiruchuzhi pwd works inspection

திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் ரூ10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் நடைபெற்று வரும்  குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆய்வு செய்தார்.

திருச்சுழி தாலுகாவில் ஆனைக்குளம், கொட்டக் காச்சியேந்தல், கணையமறித்தான், எசலி மற்றும் காரியாபட்டி தாலுகாவில் அல்லாலப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 2020-21ம் ஆண்டு தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ4.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து, காரியாபட்டி அருகே ஏரிகள் பழுது மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ்ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று வரும் கம்பிக்குடி, சத்திரப்புளியங்குளம் இணைப்புக் கால்வாய் பணிகளையும் செயற்பொறியாளர் ஆய்வு செய்தார். மேலும், குடிமராமத்துப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கிய தலைமை செயற்பொறியாளர் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்தக் குடிமராமத்துப் பணிகள் மூலம் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாவில் சுமார் 1700 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் நிறைமதி, கண்ணன்,மாயன், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அதிமுக கவுன்சிலர் தோப்பூர் முருகன் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கண்மாய் குடிமராமத்துப் பணிகளுக்காக சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகா கண்மாய் பாசன விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories