பரிதிமாற் கலைஞர் சிலைக்கு மதுரை ஆட்சியர் மரியாதை!

Published:

parithimar kalaingar garlanding - 2026

மதுரை: தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரிய பரிதிமாற் கலைஞர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரி முதன் முதலில் குரல் கொடுத்தவரும், சிறந்த இலக்கியவாதியுமானவருமான
பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள். அவரது 151வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், விளாச்சேரி கிராமத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அனவது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர் மாலை யணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஆகியோரும் பரிதிமாற் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related articles

Recent articles

spot_img