December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

ஜூலை 6: இன்று பாலமுரளி கிருஷ்ணா பிறந்த நாள்!

balamurali krishna3 - 2025

அவருடைய வாழ்க்கையே ஒரு சங்கீத அருவி. ‘சுஸ்வர மகரிஷி’ யான அவருக்கும் அவருடைய சங்கீதத்திற்கும் என்றும் இளமையே நிலவும் என்று நிரூபித்தவர் பாலமுரளிகிருஷ்ணா. 
கர்நாடக சங்கீதம் என்றாலே உடனே நினைவுக்கு வருபவர் பாலமுரளிகிருஷ்ணா.

இவர் 6 ஜூலை 1930ல் கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கரகுப்தா என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தாயார் சூரியகாந்தம். தந்தை பட்டாபிராமய்யா. தாயார் வீணைக்  கலைஞர். தாத்தாவான ப்ரயாக ரங்கதாசு சிறந்த இசைக் கலைஞர்.

இவர் பல கீர்த்தனைகளை எழுதி ஸ்வரம் கட்டியுள்ளார். அவை ப்ரயாக ரங்கதாசு கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ் பெற்றுள்ளன. பாலமுரளிகிருஷ்ணா அவற்றை பாடியுள்ளார்.

balamurali krishna2 - 2025

 பாலமுரளி கிருஷ்ணா சிறு வயதிலேயே தாயை இழந்தார். இவர் 7வது வயதில் இருந்து  கர்நாடக சங்கீத கச்சேரி செய்ய தொடங்கினார். ஒன்பதாவது வயதில் வயலின் மிருதங்கம் கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதில் கூட  திறமை பெற்றார்.

மகனின் சங்கீத ஞானத்தை அடையாளம் கண்ட தந்தை பட்டாபிராமய்யா பாலமுரளி கிருஷ்ணாவை  பிரம்மஸ்ரீ பாருபல்லி ராமகிருஷ்ணய்யா என்பவரிடம் சீடராகச் சேர்த்து விட்டார். அதன்மூலம் மங்களம்பல்லி பாலமுரளிகிருஷ்ணாவின் வாழ்க்கைக்கு ஒரு மார்க்கம் பிறந்தது.  படிப்பை முடித்த பின் பாலமுரளிகிருஷ்ணா விஜயவாடா அரசு சங்கீத கல்லூரியில் பிரின்ஸ்பாலாக சிலகாலம் பணிபுரிந்தார். 

balamurali krishna1 - 2025

சிறிது காலத்தில் மதராசிலேயே நிலைபெற்று  வசித்து தமிழ் கன்னடம் மலையாளம் மொழிகளைக் கூட திறம்படக் கற்றார். சுமார் 30,000 கச்சேரிகளுக்கு மேலாக  செய்துள்ளார். அன்னமய்யா கீர்த்தனைகள் ராமதாஸர் கீர்த்தனைகள் பக்தி பாடல்கள் மெல்லிசை பாடல்கள்… என்று இவர் பாடிய  பாடல்களுக்கு அளவே இல்லை.

ஆயிரக்கணக்கான கேசட்டுகள், ரெக்கார்டுகள் ரிலீஸ் ஆயின. பாலமுரளிகிருஷ்ணா பாடகர் மட்டுமல்ல… 72 மேளகர்த்தா இராகங்களில் கீர்த்தனைகள் எழுதியுள்ள வாகேயக்காரர். லவங்கி, த்ரிசக்தி, மஹதி போன்ற சிறந்த ராகங்களை படைத்த சங்கீத சரஸ்வதி பாலமுரளிகிருஷ்ணா.

balamurali krishna - 2025

 சினிமா பாடல்கள் கூட மிக அற்புதமாக  பல மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா சினிமாவில் நாரதராக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். ஹம்சகீதா என்ற கன்னட படத்தில்  இசை அமைத்ததோடு மிகச் சிறந்த பாடகராக விருது பெற்றார்.

மத்வாச்சாரியார் படத்திலும் தேசிய விருது பெற்றார். கான சுதாகர, சங்கீத சாம்ராட், சங்கீத கலா சரஸ்வதி, களா ப்ரபூர்ணா, கான கந்தர்வா போன்ற நூற்றுக்கணக்கான விருதுகள் இவருக்கு சொந்தமாயான. அதுமட்டுமின்றி பிரெஞ்சு அரசாங்கத்திலிருந்து மிகவும் கௌரவம் பொருந்திய சேவலியர் அவார்டு பெற்ற ஒரே கர்நாடக சங்கீத வித்வான் இவர்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories