December 5, 2025, 2:57 PM
26.9 C
Chennai

பிரதமர் பிறந்த நாளில் மாட்டுவண்டி போட்டி நடத்த அனுமதி மறுப்பு..

பிரதமர் மோடி பிறந்தநாளன்று நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டுவண்டி போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இந்த பகுதியின் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; தனது கிராமத்தில் பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் அதேபோல மாட்டுவண்டி பந்தையம் மற்றும் குதிரை வண்டி பந்தையங்கள் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளோம்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையாக அனுமதி கேட்டோம். ஆனால் இந்த பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினர் இடையே கலவர பிரச்சனை இருப்பதாகவும் எனவே இதற்கு அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே இதனை தடை செய்து மோடியின் பிறந்த நாளில் மாட்டுவண்டி பந்தையம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; அந்த பகுதியில் மாட்டுவண்டி பந்தையம் நடத்துவது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் இங்கு அனுமதி தர இயலாது. மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை கருத்தில் கொண்டே காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி; பிறந்த நாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்ட உதவிகள், இனிப்பு வழங்கலாம்; மாட்டு வண்டி போட்டி தான் நடத்த வேண்டும் என்பதில்லை என கூறி மாட்டுவண்டி போட்டி நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர்.

madurai bench of madras hc1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories