ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு: நீதிபதிகளுக்கு பாதுகாப்பளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க, உள்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். பிரகாசன் வீட்டில் புதன்கிழமை மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில், நீதிபதியும் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிபதி வீடு மீது நடத்திய தாக்குதல் சம்பவம் என்பது நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நீதித் துறையின் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம்களில் ஒன்றாகும். சட்டத்தை செயல்படுத்தவும், ஜனநாயகம் தழைக்கவும் நீதித் துறையில் சுதந்திரம் அவசியமாகிறது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. சம்பவம் நடக்கவிருப்பதை உளவுப் பிரிவு போலீஸார் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கத் தவறியுள்ளனர். பொதுமக்கள் தங்களின் உரிமைகளை நீதிமன்றங்கள்தான் காப்பாற்றுகின்றன என்று நம்புகின்றனர். நீதிபதிக்கே அச்சுறுத்தல் ஏற்படுமானால், நீதிமன்றங்களுக்கு வரும் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட நீதிபதியின் உயிருக்கு சமூக விரோதிகளால் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அவருக்கு ராமநாதபுரம் எஸ்.பி. உடனடியாக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது வீட்டில் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும், குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்துறை முதன்மைச் செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் செய்யவேண்டும். மேலும், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும்… – என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories