December 5, 2025, 2:28 PM
26.9 C
Chennai

ஆடி-18 நாளில் சிவகாசியில் 2025ம் ஆண்டுக்கான காலண்டர் பூஜை போட்டு வெளியீடு!

sivakasi calender
#image_title
  • சிவகாசியில், ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில், ‘2025’ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பங்கள் வெளியீடு… QR கோடுடன் காலண்டர் அறிமுகம்…
  • 234 சட்டமன்ற தொகுதிகளின் சிறப்பம்சங்கள் குறித்து மெகா சைஸ் காலண்டர் அறிமுகம்…..

‘2025’ ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க, சிவகாசியின் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளான இன்று, புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் முக்கியமான தொழில்களில் முதன்மையானதாக அச்சகங்கள் இருந்து வருகிறது. இங்குள்ள அச்சகங்களில், 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளில் மட்டும் பிரத்யேகமாக ஈடுபட்டு வருகின்றன.

சிவகாசி அச்சகங்களில் வழக்கமான தினசரி காலண்டர்களுடன் பல வடிவங்களில் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

டை கட்டிங் காலண்டர், பாயில்ஸ் காலண்டர், சில்வர் கோட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், யூவி காலண்டர், கையடக்க காலண்டர் முதல் மெகா சைஸ் வரையிலான காலண்டர்கள், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், பல வடிவங்களில் சுவாமி படங்களுடன், அழகிய போட்டோ பிரேம்களுடன் கூடிய காலண்டர்கள், இந்து கடவுள்கள், கிறிஸ்து மற்றும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள், தமிழக பிரபல அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள், தமிழகத்தின் பிரபலமான இடங்கள், இந்தியாவின் முக்கிய இடங்கள், உலக நாடுகளில் பிரபலமான இடங்கள் என கண்கவரும் வகையில் அச்சிடப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்களிலான காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் புது ரகம் மற்றும் புது வடிவங்களில் காலண்டர்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஒரு காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட வடிவங்கள் மற்றும் டிசைன்களில் காலண்டர்கள் தயாராகும்.

தற்போது, வரும் 2025ம் ஆண்டிற்கான காலண்டர்களின் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளன்று காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புத்தாண்டிற்கான காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்படும்.

தயாராகியுள்ள காலண்டர் ஆல்பங்கள், காலண்டர்கள் ஆர்டர்கள் எடுக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆல்பங்களில் இருக்கும் மாதிரிகளை வாடிக்கையாளர் களிடம் காண்பித்து, அவர்கள் விரும்பும் ரக காலண்டர்களை ஆர்டர்கள் பெற்று காலண்டர் நிறுவனத்திற்கு முகவர்கள் தருவார்கள்.

முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் ரக காலண்டர்களை தயார் செய்து அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடும். ஆடி 18ம் பெருக்கு நாளிலிருந்தே வரும் புத்தாண்டிற்கான காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கிவிடும்.

ஆடிப் பெருக்கு நாளில், புத்தாண்டு காலண்டர் சீசன் தொடங்கினாலும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தான் காலண்டர் சீசன் உச்சகட்ட விறுவிறுப்பில் இருக்கும்.

தற்போது, முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான காலண்டர் ஆல்பங்கள் இன்று, ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறும்போது, ஒவ்வோர் ஆண்டும் தினசரி காலண்டர்களில் புதுப்புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

வரும் ‘2025’ ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் மெகா சைஸிலான ‘மரகத காலம்’ காலண்டரும், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் புதுமையான வகையிலான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், அன்றைய காலண்டர் தாளில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த சட்டமன்ற தொகுதியின் சிறப்பம்சங்கள், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், கடிகாரத்துடன் கூடிய மெகா சைஸ் காலண்டர் உட்பட பல ரகங்களிலான வழக்கமான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் மூலப்பொருட்கள், தொழிலாளர்களின் கூலி உயர்வு, மின் கட்டணம் போன்ற விலை உயர்வால் காலண்டரின் விலை 10 சதவீதம் உயரும் – என தெரிவித்தார், தமிழ்நாடு தினசரி காலண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories