புரோஹிதம் செய்து வந்த 500 வேட்டிகளை வெள்ள நிவாரணத்துக்கு அளித்த அர்ச்சகர்

Published:

தேனி:
தாம் இது வரை புரோஹிதம் மூலம் சேகரித்து வைத்திருந்த சுமார் 500 வேட்டிகளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் அர்ச்சகர் ஒருவர்.

தேனி மாவட்டம் குச்சனூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் அர்ச்சகரான சீனிவாச கண்ணன், சென்ற வாரம் சுமார் 300க்கும் மேற்பட்ட வேஷ்டிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார்.
தொடர்ந்து, தாம் புரோஹிதம் மூலம் சேர்த்து வைத்திருந்த துண்டுகள், ரவிக்கை, காடா துணி உள்ளிட்ட மேலும் சிலவற்றையும், 200 வேஷ்டிகளையும் சேகரித்து, செவ்வாய்க்கிழமை இன்று மீண்டும் சேவாபாரதி தொண்டர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தேனி ஜில்லா பிரசாரக் முருகசேனிடம் வழங்கினார்.
ஜோதிடரும் அர்ச்சகருமான மேற்படி சீனிவாச கண்ணன் (9042265732) இது குறித்து நம்மிடம் கூறியபோது, வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பல ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகள் படும் துயரம் ஏழைகளான நமக்குத்தான் தெரியும். அதனால், இதுவரை நான் சேர்த்து வைத்திருந்தவை, மற்றும் நண்பர்கள் இல்லங்களில் இருந்து பெற்று அவற்றை மொத்தமாக வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்து வரும் சேவாபாரதி தொண்டர்களிடம் வழங்கினேன் என்று கூறினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img