அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா!

Published:

alankanallur muthalamman temple mandalabhishekam - 2026

அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே , குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுலா சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, குறவன்குளம் விழா கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி சிறப்பு அபிஷேகம்!

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி நரசிம்மர், கருடாழ்வார், வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.
இக் கோயிலில் உள்ள நரசிம்மர், கருடாழ்வாருக்கு, ஆடி சுவாதியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு, வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதே போல, மதுரை வைகை காலனி, கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளை, கோயில் பட்டர் கோபால கிருஷ்ணன் செய்தார்.

Related articles

Recent articles

spot_img