TNPSC தேர்வர்களுக்கு: மே 20 ஆம் தேதி முதல்.. முக்கிய அறிவிப்பு!

Published:

tnpsc - 2026

டி.என்.பி.எஸ்.இ குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

இதுக்குறித்து அந்த துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ கீழ்‌ சென்னை, கிண்டியில்‌ இயங்கி வரும்‌ மாநில தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வு தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ டிஎன்பிஎஸ்சி குரூப்‌ 4 தேர்வெழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நேரடி மற்றும்‌ இணையவழி பயிற்சி வகுப்புகள்‌ மே 20 முதல்‌ நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும்‌ https://t.me/+huB_ieZ54OEzODc9 “

Related articles

Recent articles

spot_img