December 6, 2025, 1:36 PM
29 C
Chennai

கேரளப் பெண்ணுக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம்! ரூ. 22 கோடி விழுந்தால் சும்மாவா..?!

 

kerala lady lotory1 - 2025ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த லாட்டரியில் கொல்லத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னா நாயர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன் அபுதாபியில் வசித்து வருகிறார்.

அபுதாபியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், அண்மையில் ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அதற்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.22 கோடி. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வப்னா இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்!

இதுகுறித்து அவர் கூறிய போது ‘’நான் எப்போதும் லாட்டரி சீட்டு வாங்க மாட்டேன். இதுவரை மொத்தமே மூன்று அல்லது நான்கு முறைதான் வாங்கியிருப்பேன். இப்போதுகூட நான் லாட்டரிச் சீட்டு வாங்கியதையே மறந்து விட்டேன். இது குறித்து நான் என் கணவரிடம் கூட அதைத் தெரிவிக்கவில்லை! ஆனால் பரிசு விழுந்ததை அறிந்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தேன். என் கணவரிடம் தெரிவித்ததும் அவருக்கும் அது இன்ப அதிர்ச்சிதான்! என்று கூறினார்.

இந்தப் பரிசுப் பணத்தை வைத்து என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ’’பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு! அதற்காக இந்தப் பணத்தை பயன்படுத்துவேன்’’ என்றார் அவர்.

தென் மாநிலங்களில், கேரள மாநிலத்தில் தான் இப்போதும் லாட்டரி வாங்குவதும் விற்பனையும் அதிகரித்துக் காணப் படுகிறது என்கிறார்கள். தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு தடை செய்யப் பட்டுள்ளது என்பதால், கேரள மாநிலத்தில் இருந்து லாட்டரிச்சீட்டு கொண்டு வந்து, முறைகேடாக விற்பனை செய்வதும் அங்கங்கே நடந்துவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories