தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு 24 ஆக உயர்வு!

corona dead body 1

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதியானது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 பெண்களும், 39 ஆண்களும் அடங்குவர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 29056 பேரும், அரசு கண்காணிப்பில் 26 பேரும் உள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 60 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 1020 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 24.

மதுரையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி ஆனதால், மொத்த எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரை 59 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

திருவள்ளூர், சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது.

கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்!
சென்னை – 523
கோவை – 141
திருப்பூர் – 112
திண்டுக்கல் – 80
மதுரை – 75

மதுரையில் இன்று 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் அதிகம் பாதிப்பை சந்தித்த மாவட்டங்களின் வரிசையில் 5ம் இடத்திற்கு வந்துள்ளது!

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories