பண்பொழி கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு ஓணத் திருவிழா!

Published:

panpoli temple onam pandigai - 2026
#image_title

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு திருவோணத் திருவிழா.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி அருள்மிகு ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜன் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு விழாவில் காலை 7மணிக்கு திருக்கோவில் வளாகத்தில் பல்வேறு மலா்களால் ஆன அத்தப்பூ கோலம் இடப்பட்டது. 10.30மணிக்கு ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜன் பெருமாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு பல்வேறு விதமான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.

இரவு 7.45மணிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனா்.

விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை பணிநிறைவு பெற்ற ஆசிரியா்ஆறுமுகம், முன்னாள் இராணுவ வீரர் பெரியசாமி, மருந்தாளுநர்முருகையா ஆகியோர் செய்திருந்தனா்.

Related articles

Recent articles

spot_img