ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துத்திகுளத்தில் சமுதாயநலகூடமும் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார் அதற்கான ,பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா ,கல்வெட்டு திறப்புவிழா நடைபெற்றது நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியதலைவர் ஆர்.முருகையாபாண்டியன் தலைமை தாங்கினார் . புதிய திட்டங்களுக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி அடிக்கல் நாட்டினார் பூமி பூஜையை துவக்கி வைத்தார் விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் மு.சேர்மபாண்டியன் ,முருகேசன் ,யூனியன்துணைச் சேர்மன் குணம் ,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்
அடிக்கல் நாட்டுவிழா
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

