December 6, 2025, 6:42 AM
23.8 C
Chennai

என்னை ஒரு முஸ்லிம் துரோகி என்றார்: முன்னாள் எம்.பி. மீது ஷாஜியா இல்மி குற்றச்சாட்டு!

akbar-akamed
akbar-akamed

பா.ஜ.க.வில் இணைந்ததால் நான் ஒரு முஸ்லிம் துரோகி என்று தன்னை பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. அக்பர் அகமத் அவதூறாக பேசினார் என்று தில்லி பா.ஜ.க.வின் துணை தலைவி ஷாஜியா இல்மி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லி பா.ஜ.க.வின் துணை தலைவராக இருப்பவர் ஷாஜியா இல்மி. அவர் பகுஜன் சமாஜ் கட்சியன் முன்னாள் எம்.பி. அக்பர் அகமத் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஷாஜியா இல்மியின் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஷாஜியா இல்மி கூறியதாவது: கடந்த 5ம் தேதியன்று தென்மேற்கு தில்லியின் வசந்த்கஞ்ச் நடந்த டின்னர் பார்ட்டியில் நான் கலந்து கொண்டேன்.

அந்த பார்ட்டியில் சில தூதருடன் பேசி கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. அக்பர் அகமது அந்த உரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர் பா.ஜ.க.வையும், என்னையும் துஷ்பிரயோகம் செய்தார். அக்பர் அகமத் அந்த கூட்டத்தில் என்னை மிகவும் இழிவுப்படுத்தினார் மற்றும் அவமானப்படுத்தினார். பா.ஜ.க.வில் இணைந்ததற்காக என்னை ஒரு முஸ்லிம் துரோகி என்று கூறினார்.

Shazia-Ilmi
Shazia-Ilmi

அங்கு இருந்தவர்கள் அப்படி பேசுவதை நிறுத்துங்கள் என்று அக்பரிடம் கூறியபோதும் அவர் தொடர்ந்து என்னை அவதூறாக பேசினார். எனது பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

நீங்கள் என்னையும், பா.ஜ.க.வையும் அவமானப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், அக்பர் அகமத் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதையும் உறுதி செய்தார். இது தொடர்பாக அக்பர் அகமத் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என தகவல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories