வெள்ளத் தடுப்பு முன்னச்செரிக்கை நடவடிக்கை
கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி பார்வையிட்டார்
கீழப்பாவூர் பகுதியில் மாதங்கோயில் ,ஆசாரி வடக்குத்தெரு அருகே நீர் வரத்து உள்ள சிறு பாலங்கள் மற்றும் கீழப்பாவூர் குளங்ககளில் இருந்து நீர் வெளியேறும் மதகுகள் மற்றும் குளத்தின் கரைகளில் ஏதேனும் கசிவுகள் உள்ளதா என்றும் நீர்க் கசிவு ஏற்பட்டு மண்மூட்டைகளால் சரிசெய்யப் பட்டுள்ளதையும் பார்வையிட்டு குளக்கரையின் தன்மை குறித்தும் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு குளத்தின் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதி மற்றும் உடைந்த பாலங்களில் சரி செய்ய வேண்டியவற்றை உடனே சரி செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் மேலும் அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
உடன் பொதுபணிதுறை அதிகாரிகள் ,மாவட்டகவுன்சிலர் சேர்மப்பாண்டி, கீழப்பாவூர் யூனியன் துணைச் சேர்மன் குணம்,பெத்த நாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் இராதா,பேரூராட்சி நிர்வாக அதிகாரி விஜயகுமார் ,சுரேஷ் லிகோரி ,,ஜெயராமன் ,கணபதி ,சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்


