நிர்மலா தேவி வழக்கு விசாரணை 30 ஆம் தேதிக்குள் முடியாது: சந்தானம்
அவர் அருப்புக்கோட்டை கல்லூரி, பல்கலைக்கழக துணை வேந்தர், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்து, சிறையில் உள்ள நிர்மலா தேவியிடமும் விசரணை நடத்தினார்.
தீர்ப்பு எப்போ வழங்குறதுன்னு எங்களுக்கு தெரியும்: கண்ணாமூச்சி காட்டிய நபர்; கடுப்பான நீதிபதி!
சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தலைமை நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நீதிபதிகள் கடுப்பாகி, அந்த நபரை வெளியேற்ற உத்தரவிட்டனர்.
காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம்
மத்திய அரசின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
மதுரை சித்திரைத் திருவிழா: கோலாகலமாய் நடந்தேறிய மீனாட்சி கல்யாண வைபவம்!
சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நாளை (28-ந்தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (29-ந்தேதி) தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. அடுத்து அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 30-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
தப்பிப் பிழைக்குமா தமிழக அரசு?!: ஓபிஎஸ்., ஆதரவு 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கால் திடீர் பரபரப்பு!
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு இன்று மதியம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ்.,ஸுக்கு எதிராக வந்தால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி உத்ஸவர் சிலை முறைகேட்டை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு!
பழனி உத்ஸவர் சிலை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்த நீதிபதி சுவாமிநாதன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரே இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லஞ்ச ஊழல் புழல் ஜெயிலர் நிர்மலா தேவி இருக்கும் சிறைக்கு மாற்றம்!
இந்நிலையில் ஜெயராமன் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஜெயிலராக இருந்த உதயகுமார் புழலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம்: ஸ்லீப்பிங் செல் செந்தில் பாலாஜி!
ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுத்ததோடு, பிரியாணியும் அவர் துறை சார்ந்த மது பான வகைகளையும் கொடுத்து சேர்த்த கூட்டத்தை விட, டி.டி.வி.தினகரனுக்குக் கூடிய கூட்டம் அதிகம்.இந்த அபரிமிதமான கூட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத தங்கமணி என்கிற தகரமணி, தவறான கருத்துகளைக் கூறி வருகிறார்.
ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தை கைவிட்டால், கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதீப் யாதவ் கூறியதால், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஊதிய...
போராடி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிககள்...
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோவிடம் இல்லையாம்
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோவிடம் இல்லையாம் ,சிசு மாதிரிகளை தாங்கள் எடுக்கவே இல்லை என அப்பல்லோ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்
குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த...