February 22, 2026, 1:04 AM
26.7 C
Chennai

தப்பிப் பிழைக்குமா தமிழக அரசு?!: ஓபிஎஸ்., ஆதரவு 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கால் திடீர் பரபரப்பு!

panneerselvam tn - 2026

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ்., உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, முதல்வராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். திடீரென அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். இதனால், தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று கூறி, திடீரென தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்., சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகு 2017 பிப்ரவரி 16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். தொடர்ந்து ஆளுநரின் உத்தரவுப்படி அடுத்த இரு நாட்களில் சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ், அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அதில், பழனிசாமி அரசு வெற்றி பெற்றது என்றாலும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி திமுக கொறடா அர.சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி டிடிவி தினகரன் ஆதரவாளர் பி.வெற்றிவேல் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில், திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு இன்று மதியம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ்.,ஸுக்கு எதிராக வந்தால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories