December 5, 2025, 6:21 PM
26.7 C
Chennai

மதுரை சித்திரைத் திருவிழா: கோலாகலமாய் நடந்தேறிய மீனாட்சி கல்யாண வைபவம்!

Madurai meenakshi amman sundareswarar1 - 2025

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசுவரப் பெருமானுக்கும் இன்று காலை  திருக்கல்யாண உத்ஸவம் சிறப்பாக நடந்தேறியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை வழிபட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அடுத்த முக்கிய உத்ஸவமான திருக்கல்யாண உத்ஸவம், வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது.  இதற்காக வடக்கு ஆடி- மேற்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மேடை வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Madurai meenakshi amman sundareswarar3 - 2025

திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானை ஆகியோர் மணமேடையில் எழுந்தருளினர். அதன் பிறகு மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடைக்கு வந்ததும் திருமண வைபவம் தொடங்கியது. குலசேகரபட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும், வேடம்பூண்டு மாலை மாற்றிக் கொண்டனர்.

Madurai meenakshi amman sundareswarar5 - 2025

அம்மன்-சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாற்றப் பட்டு மணப்பெண் சார்பில் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்கள் நலுங்கு செய்தனர். காலை 9.25 மணிக்கு மிதுன லக்னத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கல நாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுத் திருமாங்கல்யம் அணிந்து கொண்டனர்.

Madurai meenakshi amman sundareswarar4 - 2025

திருக்கல்யாணம் முடிந்ததும் அம்மன்-சுவாமி ஆகியோர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

இன்று இரவு அனந்த ராயர் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் அம்மனும், சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். அப்போது மாசி வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்கிறார்கள்.

Madurai meenakshi amman sundareswarar2 - 2025

சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நாளை (28-ந்தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (29-ந்தேதி) தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. அடுத்து அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 30-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

திருக்கல்யாணம் முடிந்ததும் காலை 9.30 மணி முதல் மேற்கு, வடக்கு, தெற்கு கோபுர நுழைவு வாயில்களில் தாலி கயிறு, மஞ்சள்கிழங்கு, தாழம்பு குங்குமும், விபூதி, பிஸ்கெட் பாக்கெட், குடிநீர் பாக்கெட் அடங்கிய 50 ஆயிரம் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories