December 5, 2025, 7:31 PM
26.7 C
Chennai

டிடிவி தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம்: ஸ்லீப்பிங் செல் செந்தில் பாலாஜி!

senthil balaji - 2025

டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம்’ என்று குடும்பச் சண்டையில் பல்வேறு குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்க, தன் பங்குக்கு ஒரு புயலைக் கிளப்பியுள்ளார் செந்தில் பாலாஜி.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டி.டி.வி.தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் தரப்பிற்கும் பிரச்னை வெடித்துக் கிளம்பி, தற்போதைய அரசியல் களத்தில் தீனி  போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தன் பங்குக்கு ஒரு தீனி போட்டிருக்கிறார் தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம்

தன் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், “நாங்கள் தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம். வேறு யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது” என்று பேசி, மேலும் தூபம் போட்டிருக்கிறார் திவாகரன் தரப்புக்கு!

கரூர் தான்தோன்றிமலை நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தெற்கு நகரச் செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் ஆளுகின்ற அரசு, மத்திய அரசைக் கண்டித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கண்டித்து என்கிற வார்த்தையைகூட ஃபிளெக்ஸ் பேனர்களில் போடவில்லை. ஆனால், `வலியுறுத்தி’ என்கிற வார்த்தையை மட்டும் தமிழகம் முழுவதும் போட்டு, அ.தி.மு.க உண்ணாவிரதம் என்கிற நாடகத்தை நடத்தியது.

பல இடங்களில் எங்கள் அமைப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீஸாரை வைத்து எங்களுக்கு அனுமதியளிக்காமல் இந்த அரசு வதைத்தது.

தங்கமணி என்ற தகரமணி

நாமக்கலில் நடந்த உண்ணாவிரதத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுத்ததோடு, பிரியாணியும் அவர் துறை சார்ந்த மது பான வகைகளையும் கொடுத்து சேர்த்த கூட்டத்தை விட, டி.டி.வி.தினகரனுக்குக் கூடிய கூட்டம் அதிகம்.

இந்த அபரிமிதமான கூட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத தங்கமணி என்கிற தகரமணி, தவறான கருத்துகளைக் கூறி வருகிறார்.

ஆஞ்சனேயர் கோயிலில் சத்தியம் செய்வேன்

சசிகலாவினாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும்தான் தங்கமணியும் அவரோடு சேர்ந்த அமைச்சர்களும் முதல்வர் உள்ளிட்டோரும் பதவி வாங்கினர். நான் இதை தங்கமணி ஊரிலேயே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சத்தியம் செய்து சொல்கிறேன்.

’சசிகலா தரப்பால், தான் பதவி வாங்கவில்லை’ என்பதை அவர் சத்தியம் செய்ய தயாரா?. இந்திய அரசியலமைப்பு வரலாற்று சாசனத்தில் முதன்முறையாக ஆளுகின்ற ஒரு கட்சியின் முதல்வர் உள்பட அனைத்துத்துறை அமைச்சர்களும் வரும் தேர்தலில் டெபாசிட் இழக்கும் வகையில் படுதோல்வியடைவார்கள்.

நாங்கள் டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம். வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டோம்” என்று பேசி முடித்தார்.

அண்மைக் காலமாக, டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்துக்கு இடையே குடும்பச் சண்டை, அதிகாரச் சண்டையாகி, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் செய்த தவறுகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்து வருகின்றது குறிப்பிடத் தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories