December 5, 2025, 3:59 PM
27.9 C
Chennai

தீர்ப்பு எப்போ வழங்குறதுன்னு எங்களுக்கு தெரியும்: கண்ணாமூச்சி காட்டிய நபர்; கடுப்பான நீதிபதி!

Madras High Court in Chennai - 2025

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தலைமை நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நீதிபதிகள் கடுப்பாகி, அந்த நபரை வெளியேற்ற உத்தரவிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பிக்கிறது.

இந்நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் தகுதி நீக்கத்தால் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனுதாரர் தேவராஜன் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக் கூடாது என அவர் முறையீடு செய்தார். தேவராஜன் முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு தரக்கூடாது என தேவராஜன் முறையீடு செய்தார். அப்போது 11 பெரிதா? 18 பெரிதா? என்று தலைமை நீதிபதியிடம் கேள்வி எழுப்பிய அவர், முதலில் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேவராஜனின் இந்த நடவடிக்கைக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எம்எல்ஏக்கள் வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் என்றார். ஆனாலும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார் தேவராஜன். அப்போது வழக்கிற்கு தொடர்பில்லாத ஒருவர் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறினார். இருப்பினும் தேவராஜன், தான் ஒன்றும் தீவிரவாதியில்லை என்றும் வாக்காளர் என்ற முறையில் முறையிட்டதாகவும் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி சிஎஸ்எப்ஐ வீரர்களை அழைத்து தேவராஜனை வெளியேற்ற உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories