பழனி உத்ஸவர் சிலை முறைகேட்டை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு!

pon manickavel - 2026

மதுரை: பழனி உத்ஸவர் சிலை முறைகேடு குறித்த வழக்கை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை கவனித்து வரும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலே விசாரிக்க வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி உத்தரவை ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது.

பழனி பாலதண்டாயுதபானி திருக்கோவிலில் உத்ஸவர் சிலை செய்யப் பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 200 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன உத்ஸவர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதை அடுத்து இருவரும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர்.

pon manikkavel - 2026

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்பு, வியாழக்கிழமை இன்று பிற்பகல் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்தபதி முத்தையாவுக்கும், கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜாவுக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அதேபோல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில் கூறியபோது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக தாம் நியமிக்கப் பட்டாலும், தமிழக டிஜிபி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதால், பழனி கோவில் உத்ஸவர் சிலை முறைகேடு குறித்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

madurai high court - 2026

மேலும், இத்தகைய சூழலில் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடக் கூடும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை அடுத்து நீதிபதி சுவாமிநாதன், ஸ்தபதி முத்தையா, கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோருக்கு, வயது மூப்பினைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும், ஸ்தபதி முத்தையா 90 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்றும், கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜா, கோயம்புத்தூரில் 90 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், இருவருமே செல்போன், வீட்டு போன்களை உபயோகிக்கக் கூடாது என்றும், அவர்களை கண்காணிப்பதற்கு காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், இதற்கு ஆகும் செலவை முத்தையா மற்றும் ராஜாவே ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

அடுத்து, பழனி உத்ஸவர் சிலை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்த நீதிபதி சுவாமிநாதன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரே இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories