பழனி உத்ஸவர் சிலை முறைகேட்டை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு!

pon manickavel - 2026

மதுரை: பழனி உத்ஸவர் சிலை முறைகேடு குறித்த வழக்கை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை கவனித்து வரும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலே விசாரிக்க வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி உத்தரவை ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது.

பழனி பாலதண்டாயுதபானி திருக்கோவிலில் உத்ஸவர் சிலை செய்யப் பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 200 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன உத்ஸவர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதை அடுத்து இருவரும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர்.

pon manikkavel - 2026

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்பு, வியாழக்கிழமை இன்று பிற்பகல் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்தபதி முத்தையாவுக்கும், கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜாவுக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேபோல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில் கூறியபோது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக தாம் நியமிக்கப் பட்டாலும், தமிழக டிஜிபி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதால், பழனி கோவில் உத்ஸவர் சிலை முறைகேடு குறித்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

madurai high court - 2026

மேலும், இத்தகைய சூழலில் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடக் கூடும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை அடுத்து நீதிபதி சுவாமிநாதன், ஸ்தபதி முத்தையா, கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோருக்கு, வயது மூப்பினைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும், ஸ்தபதி முத்தையா 90 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்றும், கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜா, கோயம்புத்தூரில் 90 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், இருவருமே செல்போன், வீட்டு போன்களை உபயோகிக்கக் கூடாது என்றும், அவர்களை கண்காணிப்பதற்கு காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், இதற்கு ஆகும் செலவை முத்தையா மற்றும் ராஜாவே ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.

அடுத்து, பழனி உத்ஸவர் சிலை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்த நீதிபதி சுவாமிநாதன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரே இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories