நீதிபதியை நீக்க நாக்கை நீட்டி மூக்குடைபட்ட காங்கிரஸ்!

kapil sibal congress - 2026

காங்கிரஸும், உச்ச நீதி மன்றமும் – என்ற தலைப்பில், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் தகவல் இது…

இப்போது, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கபில் சிபல், பிரஷாந்த் பூஷன். இந்திரா ஜெசிங், அபிஷேக் மனு சிங்வி, போன்ற உச்ச நீதி மன்ற வக்கீல்கள், பல ஆண்டுகளாக, தங்கள் வசம் உள்ள வழக்குகளை, தங்களுக்கு சாதகமான “பெஞ்ச்” களில் போட்டுக் கொண்டு, நீதிபதிகளின் தயவில், கோடி கோடியாக சம்பாதித்து வந்தனர்.

இப்போதுள்ள நேர்மையான தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா விடம் இவர்கள் “பாச்சா” பலிக்கவில்லை. அவருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன் படுத்தி, எந்த வழக்கு எந்த பெஞ்சால் விசாரிக்கப் பட வேண்டும் என்பதை அவரே நிர்ணயிக்கிறார். இதனால், இந்த நாதாரிகளின் செக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதனால் தான், இவர்கள் இப்போது, குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு, சில எம் பிக்களின் உதவியுடன் தீபக் மிஸ்ரா மீது “இம்பீச்மென்ட்” நடவடிக்கை எடுக்க, பாராளுமன்ற ராஜ்ய சபை சேர்மனாகிய, உதவி ஜனாதிபதி, வெங்கைய நாயுடு விடம் , மனு கொடுத்தனர்.

அதில், இந்த சோப்ளாங்கிகள், தீபக் மிஸ்ராவைப் பற்றி எந்த அவதூறையும் சொல்ல முடியவில்லை. எனவே, வெங்கைய நாயுடு, இவர்கள் மனுவை “ஆய்”” துடைக்க அனுப்பி விட்டார. இதனை எதிர்த்து அப்பீலும் செய்ய முடியாது. பாவம் காங்கிரஸ்.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

இப்போது நீதிமன்ற நேர்மை பற்ரி வாய் கிழியப் பேசும் காங்கிரஸ், தங்கள் ஆட்சியில், நீதிமன்றத்தை எப்படி நடத்தி வந்திருக்கிறது தெரியுமா?

1. 1973-ல், இந்திரா காந்தி, பிரதமராக இருக்கும் போது, உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான, ஷெலாட், ஹெக்டே, குரோவர் என்னும் 3 நீதிபதிகளைப் புறம் தள்ளி விட்டு, ஏ என் ரே என்பவரை தலைமை நீதிபதியாக நியமித்தார். அதனால், அந்த 3 நீதிபதிகளும் ராஜிநாமா செய்தனர். அப்போது பார்லிமென்ட்டில், இந்திரா, ஆட்சிக்கு சாதகமான தலைமை நீதிபதியை நியமிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று பேசினார். அப்போது எங்கே போனது காங்கிரஸின் “நீதிமன்ற நேர்மையைக் காப்பது”?

2. 1975-ல், ராஜ்நாராயண் என்பவர், இந்தரா காந்தியின் தேர்தல் பற்றி ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில், ஜே என் சின்ஹா என்னும் நீதிபதி முன்பு போட்ட போது, காங்கிரஸார், அந்த நீதிபதியை, , தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கா விட்டால், அவர் மனைவிக்கு ஆபத்து ஏற்படும்” என்று மிரட்டினர். நேர்மையான அந்த நீதிபதி, “ என் மனைவி 2 மாதம் முன்பே, இறந்து விட்டார்” என்று சொல்லி, இந்திராவுக்கு எதிடாக தீர்ப்பளித்தார். அதனால் தான் நம் நாடில் அவசரநிலையை இந்திரா பிரகடனம் செய்தார். அப்போது எங்கே போனது காங்கிரஸாரின் “நீதி மன்ற நேர்மையைக் காப்பது”

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

3. 1976-ல், ஒரு வழக்கில், காங்கிரஸுக்கு சாதகமாக , ஏ என் ரே, எம் ஆர் பெக், சந்திரசூட், பகவதி,என்னும் ஜட்ஜ்கள் தீர்ப்பளிக்க, கன்னா என்னும் ஜட்ஜ் மட்டும் எதிர்த்துத் தீர்பபளித்தார். அதற்கு அவருக்குக் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மற்ற ஜட்ஜ்கள் தலைமை நீதிபதியாக கன்னாவுக்கு மட்டும், தலைமை நீதிபதிப் பதவி இந்திராவால் தரப் படவே இல்லை. எம் ஆர் பெக் குக்கு ராஜீவ் காந்தி காலத்தில் பத்ம விபூஷன் பட்டம் வேறு கொடுக்கப் பட்டது. இது தான் காங்கிரஸ், “நீதிமன்ற நேர்மையைக் காத்தது”.

4. இதில், காங்கிரஸுக்கு சாதகமான, எம் ஆர் பெக் என்னும் நீதிபதி பணி நிறைவு செய்ததும், 1980-ல், மைனாரிடி கமிஷன் தலைவராக நியமிக்கப் பட்டார். பின்னால், காங்கிரஸின் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் டைரக்டர் ஆனார்.

5. பாஹுல் இஸ்லாம் என்பவர் காங்கிரஸ் எம் பி யாக இருந்தவர். பின் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நீதிபதியானார். கௌஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், 1980-ல் ரிடையர் ஆனார். இந்திரா காந்தி, இவரை, ரிடையர் ஆகி 9 மாதம் கழித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆக்கினார். பின் இவர் அஸ்ஸாமில் உள்ள பர்பேட்டா தொகுதியில் எம் பி தேர்தலில் காங்கிரஸ் டிக்கெட்டில் நின்றார். இது ஒரு பெரியக் கூத்து.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

6. இந்திரா காலத்தில் இருந்து, தங்களுக்கு சாதகமாக, வழக்குகளை தங்களுக்கு வேண்டிய ஜட்ஜ்களின் பெஞ்ச்களுக்கு மாற்றிக் கொள்ளும் கெட்ட வழக்கம் வந்து விட்டது. இதனால், கபில் சிபல் போன்ற வக்கீல்களுக்கும் பிழைப்பு மிக நன்றாக நடக்கத் தொடங்கியது.அவர்கள் வாயில் இப்போதுள்ள தலைமை நீதிபதி மண்னை அள்ளிப் போட்டு விட்டார். அது தான் இவர்களுக்குக் கோபம்.

7. ஜஸ்டிஸ் ராமசாமி என்பவர் மீது, 14 குற்றங்கள் சுமத்தப் பட்டன. அவற்ரில் 11 க்கு ஆதாரங்கள் வலுவாக இருந்தும், காங்கிரஸ் அவருக்கு சாதகமாக நின்று இம்பீச்மென்ட் வராமல் பார்த்துக் கொண்டு, தன் நீதிமன்ற நேர்மையை உலகுக்குக் காட்டியது.

இதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரிய வேண்டும். அப்படித் தெரிய வைத்தால் தான் மதவாத, கேவல, கொள்ளைக்கார அரசியலை நடத்தி வரும் காங்கிரஸின் முகத் திரை கிழியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories