December 6, 2025, 10:50 AM
26.8 C
Chennai

முதலமைச்சர் கனவுக்கு சாபக்கேடாக… கரூரில் ஒரு கல்வி அதிகாரி!

karur-college
karur-college
  • தமிழக முதல்வரின் உத்திரவையே உதாசீனப்படுத்தும் கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர்?
  • நடவடிக்கை எடுக்குமா உயர் கல்வித் துறை நிர்வாகம்?
  • இது கரூர் அரசு கலைக் கல்லூரியின் அரசியலா ?

இந்திய அளவிலேயே தமிழகம் உயர்கல்வித்துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி தமிழகத்திலேயே 109 அரசு கலைக்கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த வருடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி 7 அரசு கலைக்கல்லூரிகளை தமிழகத்தில் செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதில், கரூர் மாவட்டம், தரகம்பட்டி புதிய அரசு கலைக்கல்லூரியைத் தவிர மற்ற 6 அரசு கலைக் கல்லூரிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கு பணியில் சேர்ந்து அரசு ஆணையை மதித்தும், மாணவ, மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டி சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

அதில், கரூர் மாவட்டத்திற்கு, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தரகம்பட்டி பகுதியில் புதிததாக அரசு கலைக்கல்லூரி தொடங்க ஆணை பிறப்பித்து, அரசின் உத்திரவை உயர்கல்வித்துறை நிர்வாகம் மதித்து உடனே மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்தப் புதிய அரசு கலைக்கல்லூரியின் சிறப்பு அதிகாரியாக செயல்பட, கரூர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து முனைவர் ராதாகிருஷ்ணன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கான பணி ஆணையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர், அங்கு சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. அந்தப் புதிய கல்லூரி அமைந்துள்ள பகுதியான தரகம்பட்டி பகுதிக்கு இவர் சரியாக வேலைக்கு வருவதில்லை என்று அங்குள்ள மக்களும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் முகம் சுழிக்கின்றனர்.

இவர் தற்போது வரை, கரூர் அரசு கலைக் கல்லூரியிலிருந்து செல்லாமல், ரீலிவிங் ஆர்டர் வாங்காமல், நான் செல்ல மாட்டேன் என்று கூறி கரூர் அரசு கலைக் கல்லூரியிலேயே டெரா போட்டு விட்டதாக அரசு கல்லூரி மாணவர்களின் வட்டாரங்களும் தகவல் தெரிவித்துள்ளன.

ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முத்தான அறிவிப்பாக விளங்கும் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி நியமித்ததை உதாசினப்படுத்தும் நோக்கில் கரூர் அரசு கலைக்கல்லூரியை சார்ந்த முனைவர் ராதாகிருஷ்ணன் செயல்படுவதாக அ.தி.மு.க கட்சியினரே குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆகவே, தமிழக முதல்வரும், உயர்கல்வித்துறையும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையாக ஏதேனும் நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளின் நலனை காக்க வேண்டுமென்கின்றனர் இப்பகுதியினை சார்ந்த நடுநிலையாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories