புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் மஹா வாராஹி பிரதிஷ்டை!

Published:

mahavarahi in pdk - 2026
#image_title

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவ விழா!

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் விக்னேஷ்வர பூஜை,மகா கணபதி ஹோமம் கோ பூஜை லட்சுமிபூஜை நவகிரக ஹோமம் ,புனித நீர் குடங்களுக்கு,பூர்ணாஹூ தி மஹா தீபாரதனை சிறப்பாக மணி குருக்கள் மற்றும் ரவி குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் , மஹா தீபராதனை நடைபெற்றது

நிகழ்வில் திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

மூத்த வழக்கறிஞர் சொக்கலிங்கம் தி மு.க நகர செயலாளர் செந்தில் ,நகர்மன்ற உறுப்பினர் சேட்டு உள்ளிட்ட பிரமுகர்கள் உபயதார்கள் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் மற்றும் அனுமன் திருச்சபை நிர்வாகிகள் செய்தனர்.

  • செய்தி: டீலக்ஸ் சேகர்

Related articles

Recent articles

spot_img