TENKASI தென்காசி தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம் ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்துவதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரா போலீசார்சுட்டுக் கொன்றதை கண்டித்து தென்காசியில் ச.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தென்காசி தாலுகா அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர்அதியமான் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை முன்னிலை வகித்தார் தென்காசி நகர செயலாளர் அருணா வரவேற்றார் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர்கள் கண்ணன், ஜான்ரவி, எட்வின், விசுவாசம் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் . இலஞ்சி அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் ராபார்ட், பெரியசாமி, மாணவரணி கணேசன், பாலகிருஷ்ணன், மேலகரம் தேவி, நயினார், செல்வராஜ், இசக்கிராஜன், நந்து, மாரியப்பன், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஒன்றிய செயலாளர்வில்சன் நன்றி கூறினார்
தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari