மயக்க ஸ்பிரே அடித்துமூதாட்டியிடம் 20 பவு ன் நகைகள் கொள்ளை

Published:

கோவில்பட்டி:கோவில்பட்டியில் நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி செளந்தரபாண்டியன் தெருவைச் சேர்ந்த ராஜாமாணிக்கம் மனைவி மனோன்மணி (70). இவர் வீட்டில் தனியாக இருந்த போது கேஸ் சர்வீஸ் செய்ய வந்திருப்பதாகக் கூறி 25 வயது இளைஞர் வீட்டுக்குள் நுழைந்தாராம். மனோன்மணி பீரோவை திறந்து கேஸ் புக்கை எடுக்க முயலும் போது, அந்த இளைஞர் மயக்க மருந்தை அவர் மீது தெளித்துள்ளார்.அப்போது மூதாட்டி மயங்கி விழுந்தவுடன், பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு அந்த நபர் சென்றுஓடி விட்டாராம். சிறிது நேரம் கழித்து மனோன்மணியின் மகன் தங்கராஜ் வந்து பார்த்த போது மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த தாயிடம் கேட்ட போது, அவர் நடந்ததை கூறினாராம்.இதுகுறித்துகோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். category latest-news செய்தியும் படமும்-வனஸ் 5fa6fa5d0ed1dbc87b3341971a0a28ab - 2026

Related articles

Recent articles

spot_img