இதைவிட கொரோனா ஊழலை வெளிப்படுத்தி… யாராலும் அசிங்கப் படுத்த முடியாது!
கொரோனா பேரைச் சொல்லி, திருட்டு தமிழகத்தில் எப்படி திருட்டுத் தமிழன் கொள்ளை அடிக்கிறான் என்றெல்லாம் பலரும் பல விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்…
கொரோனா என்று கேஸ் பிடித்துக் கொடுத்தால் இவ்வளவு கமிஷன் என்று அடிமட்டம் தொடங்கி மேல் மட்டம் வரை ஊழல் கரை புரண்டு ஓடுகிறது.
தகரம் அடிக்க இவ்வளவு தொகை… அதற்கு கமிஷன்…
தனியார் மருத்துவமனைக்கு கேஸை அனுப்பினால் அதற்கு கமிஷன்… செத்தாலும் கமிஷன்… டெட்பாடி அரசியல் இன்னும் உச்சம்!
கொரோனா பேரைச் சொல்லி பழிவாங்கும் நடவடிக்கையிலும் அதிகார மட்டத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் ஈடுபடக் கூடும் என்பது இப்போது ஹாட் டாபிக் ஆகிப் போனது..!
ஆக… ஆக… இதோ ஒருவர் கோவை மாநகராட்சியை அசிங்கப் படுத்தியிருக்கிறார். இந்த தைரியம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வந்தால்… ஆளும் வர்க்கம் அசிங்கப்பட்டே ஓடி ஒளிய வேண்டியிருக்கும்! எல்லாம் இன்னும் எட்டு மாதங்களுக்குத்தானே!