சீட் கிடைக்காத விரக்தி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… திமுக.,வின் ஆர்.எஸ். பாரதி திட்டம்..?

rsbharathi - 2026

மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் கட்சியில் சீட் கிடைக்காத விரக்தியில் திமுக.,வின் ஆர்.எஸ். பாரதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை பாஜக., தலைவர் அண்ணாமலைக்கு ஏற்படும் என்று, ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனால் ரவுடிகள் மூலம் திமுக.,வினர் அராஜகத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.

தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேசுகையில், “தமிழக முதல்வரின் ஓராண்டு சாதனை ஆட்சியில் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து காப்பியடித்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

“கடந்த அதிமுக., ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. கோடநாடு வழக்கில் தோண்டத் தோண்ட புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இந்த விவகாரத்தில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது மக்கள் மன்றத்திற்கு தெரியவரும்.

“பிள்ளை பிடிக்கும் வேலையை பாஜக.,காரர்கள் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையைப் பிடித்து பாஜக.,வில் சேர்த்துள்ளனர். அதேபோல் தற்போது திருச்சி சிவாவின் மகனைப் பிடித்து பாஜக.,வில் சேர்த்துள்ளனர்.

தமிழகத்தில் நிலையான கொள்கை இல்லாமல் பாஜக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தைத் தூண்டும் வகையில் பாஜக., தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய திமுக.,காரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாவைப் பற்றி தவறுதலாக கிருபானந்த வாரியார் பேசினார். இதன் காரணமாக அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று பேசினார்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ். பாரதி பேச்சு குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் சில…


அண்ணாவை பற்றி விமர்சனம் செய்ததால், அதன்பின்பு கிருபானந்த வாரியாரால் எங்கும் சென்று சொற்பொழிவு ஆற்ற முடியாத அளவிற்கு செய்தனர் திமுகவினர். ஆகவே அண்ணாமலையை எச்சரிக்கிறேன், வாரியாருக்கு நேர்ந்தது தான் அவருக்கும் நடக்கும், பழைய திமுககாரனாக மாறினால் நடப்பதே வேறு… – RS பாரதி.

அண்ணாமலை வாரியார் சுவாமிகள் போன்றவர் அல்ல…
அதேபோல கட்சித் தலைவர் அண்ணாமலை காக்கிச் சட்டை அண்ணாமலையாக மாறினால் வாயில மிதிப்பார் பரவாயில்லையா ?
வாய் இருக்கேன்னு ஏதாவது பேசி , அண்ணாமலையி்டம் அசிங்கப்படாதீங்கடா


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை தாக்கிய புல்லத்தனத்தை இன்று ஒரு தீராவிட வக்கிரன் நினைவுபடுத்தியிருக்கிறான்.
அவனுக்கு தெரியாமலே அவன் மூன்று நல்ல விஷயங்களை செய்திருக்கிறான்.

  1. இந்துக்களுக்கு திராவிட இயக்கத்தின் உண்மை முகத்தை – அருவெருப்பான கோரமான கேவலமான முகத்தைக் காட்டியிருக்கிறான். வன்முறையும் ஆபாசமும் நிறைந்த அந்த முகம்தான் அவர்களின் உண்மை முகம். அதைக் காட்டியிருக்கிறான். இளந்தலைமுறை ஹிந்துக்களுக்கு எப்படிப்பட்ட அரக்க கும்பலை வாரியார் சுவாமிகள் போன்ற ஆன்மிக பெரியவர்கள் எதிர்த்து போரிட்டார்கள் என்பதைக் காட்டியிருக்கிறான்.
  2. அன்று ஆன்மிக பண்பாட்டு துறையில் தீராவிட இருளரக்கனை எதிர்த்து போரிட்டு நின்றவர் வாரியார் சுவாமிகள் என்றால் இன்று அரசியல் தளத்தில் சமரசமின்றி திமுக எனும் தீய பிற்போக்கு இனவாத கயமை சக்தியை எதிர்த்து போரிடும் ஆளுமை அண்ணாமலை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டான்.
  3. வாரியார் சுவாமிகளின் பெயரை பயன்படுத்தும் ஒருசில பிழைப்புவாதிகள் -அவர் என் குரு நான் அவர் அருளால் உருவானவன் – என்றெல்லாம் பேசுகிறவர்கள் இந்த அசிங்க உளறலுக்கு அமைதி காத்து தங்களை தாமே வெளிக்கொண்டுவரவும் உதவி செய்திருக்கிறான்.
ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

வாழ்க!

  • அரவிந்தன் நீலகண்டன்

1 COMMENT

  1. அண்ணாமலை யும் கிருபானந்த வாரியாரும் ஒன்றால்ல தலைவரே…. இவரு முன்னாள் ips அதிகாரி… வாயிலியே மிதிச்சிற போறாரு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories