சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மாநில அரசு முடிவு?

1661592278186153 - 2026

போதை பார்ட்டியில் மரணமடைந்த பாஜக நடிகை சோனாலி, தனது உதவியாளருடன் ரகசிய மனைவியாக வாழ்ந்தது அவரது குடியிருப்பு ஆவணம் மூலம் அம்பலமாகி உள்ளது. இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான சோனாலி போகத் கடந்த திங்கள்கிழமை இரவு கோவாவில் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். போதை பார்ட்டியின் போது சோனாலி போகத்துடன் அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் சிங் ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள் இருவரும், சோனாலிக்கு கட்டாயப்படுத்தி போதை பொருளை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 2 வீடியோவும் வெளியானது.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை போதை பொருள் வியாபாரி ராம மந்த்ரேகர், உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் சிங், நடைபாதை வியாபாரி தத்தபிரசாத் கவுங்கர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016ம் ஆண்டு அரியானாவில் பண்ணை வீட்டில் சோனாலி போகத்தின் கணவர் சஞ்சய் போகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் சோனாலி போகத் மும்பையில் இருந்தார். சஞ்சய் மரணத்தில் மர்மம் நீடித்த நிலையில், சோனாலி போகத்தின் மரணத்திலும் மர்மம் ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்தார்.

இந்த நிலையில் அரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள செக்டார் 102ல் அமைந்துள்ள ‘குர்கான் கிரீன்ஸ்’ சொசைட்டி குடியிருப்பில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட குடியிருப்பு வாடகை ஆவணங்களில் சோனாலி போகத்தின் கணவர் சுதிர் சங்வான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இருவரும் இந்த குடியிருப்பில் கணவன் – மனைவியாக வாழ்ந்தது அம்பலமாகி உள்ளது. மேலும், இந்த குடியிருப்புக்கு சுதிர் சங்வான் அடிக்கடி வந்து சென்றதையும், அப்பகுதியினர் உறுதிபடுத்தி உள்ளனர்.

கோவாவுக்குப் புறப்பட்டு செல்வதற்கு முன், சோனாலி போகத்தும், சுதிர் சங்வானும் ஒரே காரில் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘சோனாலி போகத் வெளியூர் சென்றிருந்த போது அவரது வங்கி லாக்கர்கள் விவகாரங்களை சுதிர் சங்வான்தான் கவனித்து வந்துள்ளார். அவர்களது குடியிருப்பை ஆய்வு செய்த போது, சில முக்கிய ஆவணங்கள், வீட்டு சாவிகள் இருந்தன. சோனாலி போகத்தின் திடீர் மரணத்தின் பின்னணியில் பணம் மற்றும் சொத்து அபகரித்தல் விவகாரமும் இருக்கலாம். அதற்காக சோனாலியை கோவா அழைத்து சென்றிருக்கலாம். சோனாலி போகத் மரண வழக்கு மற்றும் போதை ெபாருள் வழக்கு என்று இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றனர். இதற்கிடையே சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க உள்ளதாக கோவா மாநில முதல்வர் சாவந்த் தெரிவித்துள்ளார்.

images 100 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories