December 6, 2025, 6:57 PM
26.8 C
Chennai

CAA குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல!

india want caa act - 2025

இந்தியாவில் நேற்று முதல் அமல்படுத்தப் பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்பதை பலரும் தெளிவாக விளக்கி வருகின்றனர். இது குறித்து நன்கு சிந்தித்து, இச்சட்டத்தின் தன்மையை, நன்மையை இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 – CAA குடியுரிமைச் சட்டம், 1955 ஐ திருத்துகிறது. இந்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட, அந்நாடுகளின் சிறுபான்மை சமூகத்தவரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிகளுக்கானது. 

டிசம்பர் 31, 2014 அல்லது அதற்கும் முன் இந்தியாவுக்குள் நுழைந்து இங்கே தங்கியுள்ள இந்த சமூகங்களைச் சேர்ந்த எந்தவொரு நபரும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று இச்சட்டம்  கூறுகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள 18 கோடி இந்திய முஸ்லீம்களும், இந்தியர்களாகவே கருதப்பட்டு, அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது. சொல்லப் போனால், இந்துக்களைக் காட்டிலும், சிறுபான்மை சமூகம் என்ற அளவில் பல்வேறு சலுகைகளும் உரிமைகளும் வழங்கப் படுகின்றன. எனவே, CAA க்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

முக்கியமாக, மக்களை பீதியில் தள்ளக் கூடிய சமூகவிரோதிகள் சிலரின் கூற்றுப்படி, இந்தச் சட்டத்திற்குப் பிறகு எந்தவொரு இந்தியக் குடிமகனும் தனது குடியுரிமையை நிரூபிக்க, எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட மாட்டார்கள் என்பதே உண்மை!

மேலும், இச்சட்டம் இயற்கைமயமாக்கல் சட்டங்களை ரத்து செய்யவில்லை. எனவே, எந்தவொரு வெளிநாட்டிலிருந்தும் குடியேறிய முஸ்லீம்கள் உட்பட, இந்தியக் குடிமகனாக இருக்க விரும்பும் எந்தவொரு நபரும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

குடியுரிமைச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெற உலகில் எங்கிருந்தும் முஸ்லிம்களுக்கு எந்தத் தடையும் இல்லை. சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதையும் இந்த சட்டம் கையாளவில்லை. எனவே CAA முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற கவலையை முஸ்லிம்கள் மற்றும் மாணவர்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

மேற்கூறிய இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாத்தின் பதிப்பைப் பின்பற்றியதற்காக துன்புறுத்தப்படும் எந்தவொரு முஸ்லிமும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதை CAA தடுக்கவில்லை.

CAA-சட்டத்தின் பல்வேறு நோக்கங்களில் முக்கியமான ஒன்று, சட்ட விரோத குடியேறிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவது என்பதே!

இது வரும் காலத்தில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும். சிஏஏ மூன்று இஸ்லாமிய நாடுகளின் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு, இயற்கைமயமாக்கல் செயல்பாட்டில் ஒரு சிறப்பு அந்தஸ்தை வழங்கினாலும், மற்ற சமூகங்கள் பொது புகலிட நடைமுறையைப் பெறுவதைத் தடுக்காது.

முஸ்லீம் தலைவர்களில் சிலர், இந்தச் சட்டத்தின் நன்மை தரும் விளைவுகளைப் புரிந்துகொண்டு, CAA வை வைத்து முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும் பிரிவினைவாத சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் விலகி இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories