சிறுத்த சிங்கிளா இறங்கப் போவுதாம்! உதயசூரியன் சூடு வாட்டி எடுக்காம்ல..!

thirumavalavan stalin - 2026

கூட்டணிச் சிக்கலே வேண்டாம்; தனித்தே களம் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக் கிறார் திருமாவளவன் என்கிறார்கள்  அவருக்கு நெருக்கமானவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்த கொங்குநாடு ஈஸ்வரன், கூட்டணிக் கட்சியாகவும் இல்லாமல், தோழமைக் கட்சியாகவும் இல்லாமல் வெளியில் ஏதோ ஓர் கட்சியாக இருந்தார். ஆனால், அவரை அழைத்து தொகுதிப் பங்கீடு பேசி முடித்துக் கொண்டது திமுக., அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதையும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்தார் ஈஸ்வரன்.

முன்னதாக, கொங்கு மண்டலத்தில் ஒரு கூட்டம் நடத்தி, அரை சதவீதம் இருக்கும்
திருமாவளவனுக்காக, பத்து சதவீத வாக்கு  வங்கி இருக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியை இழந்துவிடாதீர்கள்! உங்களுக்கு அரை சதவீதம் வாக்கு வங்கி உள்ளவர்கள் முக்கியமா, பத்து சதவீத வாக்கு வங்கி கொண்ட நாங்கள் முக்கியமா? கூட்டணி பேசுபவர்கள் விவேகமான முடிவு எடுப்பார்கள் என்று பேசினார்.

காண்க… ஈஸ்வரன் பேச்சு…

தற்போது, ஈஸ்வரன் திமுக., கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஆனால், தோழமைக் கட்சிகள் தான் என்று துரை முருகனால் அடையாளம் காட்டப்பட்ட திருமாவளவனும் வைகோவும் இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் தலா ஒரு தொகுதிதான் என்று உறுதியாகப் பேசப்பட, அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் என்று கூறப்பட இப்போது இரு தரப்புமே யோசித்துக் கொண்டிருக்கிறது!

ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் என்ன நன்மை கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

2004ல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார் திருமாவளவன். அதன் பின்னர், 2006 தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி, 2009ல் திமுகவுடன் கூட்டணி,
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக.,வுடன் கூட்டணி, 2014 தேர்தலிலும் திமுக.,வுடன் கூட்டணி என பெரும்பாலான தேர்தல்களிலும் திமுக.,வுடன் கூட்டணியைத் தொடர்ந்தவருக்கு 2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு பிரேக் போட்டது. மக்கள் நலக் கூட்டணி என மூன்றாம் அணியில் களம் இறங்கி, படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம். மேலும், 2009 தேர்தலில் ஒரே ஒரு எம்.பி சீட்டை வென்ற திருமாவளவன், அதன் பின்னர் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பதும் விடுதலைச் சிறுத்தைகளின் ட்ராக் ரெகார்ட்!

இந்நிலையில், கூட்டணி இல்லையேல் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்ற எண்ணத்தில்தான், மீண்டும் திமுக கூட்டணிக்காக மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார் திருமாவளவன். ஆனால் அவரை கூட்டணி எனக் கூட்டாக்காமல், தோழமை என தழுவிக் கொண்டது திமுக.!

thirumavalavan vck meeting - 2026

முன்னர் பாமக.,வை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக, திருமாவை சற்று ஒதுக்கி வைத்திருந்தது திமுக., தரப்பு. ஆனால் பாமக., இல்லை என்றான பின்னர் திமுக., கூட்டணியில் திருமாவளவனின் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த இடத்தை கொங்கு ஈஸ்வரன் பிடித்து விட்டதால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக.,வில் வாய்ப்பு மங்கிக் கொண்டே வருகிறது.

அதனால்தான், ஒரே ஒரு தொகுதி, அதுவும் உதயசூரியன் சின்னம் என்று கறார் காட்டுகிறது திமுக., இது நிச்சயம் சிறுத்தைகளை உசுப்பேற்றி வெளியேற்றும் முயற்சி என்று பரவலாகக் கூறப் பட்ட நிலையில், திருமாவளவனும் அதனை உள்ளூர உணர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கடந்த 2009, 2014 தேர்தல்களில் திமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் கொடுத்ததை சுட்டிக்காட்டும் விடுதலைச் சிறுத்தைகள், இப்போதும் அதே 2 தொகுதிகளைக் கேட்கிறார்கள். ஆனால் சீமானின் பாணியில் “வாய்ப்பில்ல ராஜா” என்று சொல்லிவிட்டது திமுக.,!

இதனால், வேறு கூட்டணியில் சேர இயலாமல், தனித்தே களம் காணலாம் என்று கட்சியினர் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருக்கிறார் திருமா. மேலும், கமல் அல்லது தினகரன் என்று கூட்டணி சேர்வதற்கு பதில், தனித்தே இறங்கலாம் என்கின்றனர் கட்சியினர்.

ஆக… ஆக… சிறுத்த சிங்கிளா களம் இறங்க போவுது..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

Entertainment News

Popular Categories