December 6, 2025, 11:05 AM
26.8 C
Chennai

என்ன கொடும ’சரவணா’..? நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..!

vaiko pic - 2025

மாறி வரும் அரசியல் சூழ்நிலையில், நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை முன் வைத்து மேலும் மேலும் அரசியல் செய்வது தேச துரோகப் பேச்சுக்களின் பட்டியலை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு விடும் என்று யார் சொன்னார்களோ…?! வைகோ திடீரென்று நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்திருக்கிறார்.

ஏற்கெனவே தேசவிரோத பேச்சுக்களால் நீதிமன்ற தண்டனையை எதிர்கொண்டு, பின்னர் மாநிலங்களவை உறுப்பினரும் ஆகி விட்ட நிலையில், வைகோ அதையே மாநிலங்களவையிலும் தொடர்ந்தார். காஷ்மீர் விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதுவும் தேசவிரோதக் கருத்துகளாகவே நாடு முழுதும் பேசப்பட்டது.

இந்நிலையில், திமுக.,வைச் சேர்ந்த சரவணன், ரிபப்ளிக் டிவி விவாதத்தில் பேசிய போது, காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்ததே இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி, தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப் பட்டு, மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அனுப்பப் பட்ட 38 உறுப்பினர்களும் வைகோ உள்ளிட்டவர்களும் தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலையைப் பிரதிபலிப்பவர்கள் அல்லர்..! அவர்கள் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டையே, கூட்டணியின் நிலைப்பாட்டையே பிரதிபலிப்பவர்கள் ஆவர். என்றாலும், தேசிய அளவில், தமிழகத்தைக் குறித்த மோசமான பார்வைக்கு இவர்கள் வித்திட்டுள்ளனர்.

இந்நிலையில் சரவணன் பேச்சு குறித்து இப்போது புகார்கள் பல எழுப்பப் பட்டு கொடுக்கப் பட்ட நிலையில், வைகோவின் மீதும் பலர் புகார் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக வைகோ தனது அரசியல் நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறப் படுகிறது. அதற்காக, மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் வைகோ இருப்பதால், 20,21,22 ஆகிய நாள்களில் வைகோ, தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுகின்றது என்று மதிமுக., தரப்பில் கூறப் பட்டுள்ளது.

மேலும், உடல்நலக்குறைவால் மதுரை அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும் கூறப் பட்டுள்ளது.

அட… என்ன கொடும ‘சரவணா’ என்று இப்போது நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

முன்னதாக, உடல் நலக் குறைவால் மதுரை அப்பலோ மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆவதற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி… 

காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையில் நடை பெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

நீதிமன்றத்தை நாடி நீதிமன்றம் அனுமதியின் பேரில் பரூக் அப்துல்லாவை சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பேன்… என்றார் வைகோ.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories