ஸ்ரீவிலி-முதல் வனத்துறை மோப்பநாய் மரணம்..

IMG 20230327 WA0057 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்திற்காக முதன் முதலாக வனத்துறைக்கு என வாங்கப்பட்ட மோப்பநாய் உடல்நல குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையின் 9 வயது பெண் மோப்ப நாய் சிமி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.வனத்துறையினர் அஞ்சலியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு கடந்த 2015ல் மத்திய பிரதேசம் போபாலில் இருந்து மோப்பநாய் சிமி கொண்டு வரப்பட்டது.இதற்கு வனப்பகுதி குற்றங்களை தடுக்க டெல்லியில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையிடம் தமிழகத்தில் முதல் முதலாக ஒப்படைக்கப்பட்டது.

மோப்பநாய் சிமியை கடந்த 8 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பாளர் பெரியசாமி பயிற்சி அளித்து பராமரித்து வந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்துறை குற்றங்களை கண்டறியவும்,சமூக விரோதிகளை கண்டறியவும்,வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதும் மோப்பநாய் சிமி பணியாற்றி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கில் யானை வேட்டையில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்கு சிமி பெரும் உதவியாக இருந்தது.

IMG 20230327 WA0056 - 2026

இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதினை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மோப்பநாய் சிமி மற்றும் காப்பாளர் பெரியசாமிக்கு தந்து கௌரவித்தார்.கடந்த 2022 ஆம் ஆண்டு இரவு சதுரகிரியில் கன மழை பெய்தபோது நீர் வரத்து ஓடைகளை கடக்க சிரமப்பட்ட பக்தர்கள் இருக்கும் இடத்தை கண்டறிவதில் உதவியது.

தற்போது ஒன்பது வயது ஆகும் இந்த சிமிக்கி வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளும் வந்துள்ளது தற்போது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்படாமல் உள்ள சிமிக்கி திருநெல்வேலி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி மோப்பநாய் சிமி குறித்து வனத்துறை சேர்ந்த அதிகாரி விரைவில் தமிழகத்தின் முதல் மோப்ப நாயான சிமிக்கி பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் சிமியின் பராமரிப்பாளரான வனத்துறை ஊழியர் பெரியசாமி வீட்டில் உணவு வைத்துவிட்டு அதற்கு செய்ய வேண்டிய வழக்கமான பணிகளை செய்துவிட்டு சென்றார். காலை நாயை வந்து பார்க்க கதவு திறந்து போது நாய் பரிதாபமாக இறந்து கிடந்தது. வனத்துறைக்கு என்று முதன் முதலில் வாங்கப்பட்ட இந்த மோப்பநாய் சிமியின் உடல் வனத்துறை வளாகத்திலேயே உரிய வனத்துறையினரின் மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்வதற்கு முன் கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் அதன் உடலை பரிசோதனை செய்தார்.

தமிழகத்திற்க்கு முதன் முதலாக வனத்துறைக்கு என்று வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் படைத்துள்ளது என்பதும் மோப்பநாய் சிமி இறந்தது வனத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories