December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

ஸ்ரீவிலி-முதல் வனத்துறை மோப்பநாய் மரணம்..

IMG 20230327 WA0057 - 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்திற்காக முதன் முதலாக வனத்துறைக்கு என வாங்கப்பட்ட மோப்பநாய் உடல்நல குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையின் 9 வயது பெண் மோப்ப நாய் சிமி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.வனத்துறையினர் அஞ்சலியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு கடந்த 2015ல் மத்திய பிரதேசம் போபாலில் இருந்து மோப்பநாய் சிமி கொண்டு வரப்பட்டது.இதற்கு வனப்பகுதி குற்றங்களை தடுக்க டெல்லியில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையிடம் தமிழகத்தில் முதல் முதலாக ஒப்படைக்கப்பட்டது.

மோப்பநாய் சிமியை கடந்த 8 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பாளர் பெரியசாமி பயிற்சி அளித்து பராமரித்து வந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்துறை குற்றங்களை கண்டறியவும்,சமூக விரோதிகளை கண்டறியவும்,வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதும் மோப்பநாய் சிமி பணியாற்றி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கில் யானை வேட்டையில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்கு சிமி பெரும் உதவியாக இருந்தது.

IMG 20230327 WA0056 - 2025

இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதினை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மோப்பநாய் சிமி மற்றும் காப்பாளர் பெரியசாமிக்கு தந்து கௌரவித்தார்.கடந்த 2022 ஆம் ஆண்டு இரவு சதுரகிரியில் கன மழை பெய்தபோது நீர் வரத்து ஓடைகளை கடக்க சிரமப்பட்ட பக்தர்கள் இருக்கும் இடத்தை கண்டறிவதில் உதவியது.

தற்போது ஒன்பது வயது ஆகும் இந்த சிமிக்கி வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளும் வந்துள்ளது தற்போது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்படாமல் உள்ள சிமிக்கி திருநெல்வேலி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி மோப்பநாய் சிமி குறித்து வனத்துறை சேர்ந்த அதிகாரி விரைவில் தமிழகத்தின் முதல் மோப்ப நாயான சிமிக்கி பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் சிமியின் பராமரிப்பாளரான வனத்துறை ஊழியர் பெரியசாமி வீட்டில் உணவு வைத்துவிட்டு அதற்கு செய்ய வேண்டிய வழக்கமான பணிகளை செய்துவிட்டு சென்றார். காலை நாயை வந்து பார்க்க கதவு திறந்து போது நாய் பரிதாபமாக இறந்து கிடந்தது. வனத்துறைக்கு என்று முதன் முதலில் வாங்கப்பட்ட இந்த மோப்பநாய் சிமியின் உடல் வனத்துறை வளாகத்திலேயே உரிய வனத்துறையினரின் மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்வதற்கு முன் கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் அதன் உடலை பரிசோதனை செய்தார்.

தமிழகத்திற்க்கு முதன் முதலாக வனத்துறைக்கு என்று வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் படைத்துள்ளது என்பதும் மோப்பநாய் சிமி இறந்தது வனத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories