பாகிஸ்தான் போர் பற்றி… பஞ்சாங்க கணிப்பு சொன்னது என்ன..!

panchangam war matter - 2026

நாட்டின் முக்கிய நிகழ்வுகள் எது நடந்தாலும், பழைமை வாதிகள் சிலர் பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து பதில் சொல்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்தான்.

இப்போதும் நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்திய எலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புப் போரில் பாரதம் தலைமை தாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் பஞ்சாங்கத்தின் துணை கொண்டு, இது முன்னமேயே கணிக்கப் பட்டுள்ளது என்கிறார் கருடன் பஞ்சாங்கத்தைத் தயாரித்தளிக்கும் ஷ்ரேயஸ் முரளி பட்டாச்சார்.

அவர் இது குறித்துக் கூறியபோது, நாம் முன்னரே கணித்திருந்த பலவும் நடந்திருக்கிறது. இந்த வருடமும் அதுபோல் நடந்த நிகழ்வுகள் சிலவற்றை நாம் பகிர்ந்து கொண்டோம். பாகிஸ்தான் இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்து காணப்படும் என்றும் நாம் கணித்துக் கூறியுள்ளோம் என்றார்.

முன்னதாக இதே போல் ஒரு பஞ்சாங்கத்தில், இந்த வருடம் நாட்டில் வெடி இல்லாத தீபாவளி கொண்டாடப் படும் என்று கூறப் பட்டிருந்தது. அதன்படி நடந்ததும் பெரிதாக பேசப் பட்டது.

panchangam vedi - 2026

தற்போது ஷ்ரேயஸ் முரளி பட்டாச்சார் அளித்த கருடன் பஞ்சாங்கக் குறிப்பின் படி…

இந்த ஆண்டு உலக ஜாதகப் படி, பங்கு வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் குறைந்த மழை, சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு. பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும்..

இந்த ஆண்டு தங்கம், வெள்ளி, பெட்ரோலியப் பொருள்கள் விலை ஏறி இறங்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக, இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்து காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது விளம்பி வருடத்தின் பஞ்சாங்கம்.

தற்போது விளம்பி வருடத்தின் மாசி பங்குனி என இரண்டு மாதம் மீதமுள்ளது. அதற்குள் இந்த வருடத்தின் கணிப்புகள் வேறு என்னவெல்லாம் நடக்குமோ என்று திகில் கிளப்புகின்றனர் சிலர்.

இருப்பினும், போர் மேகம்தான் சூழும் என்றும், போர் வராது என்றும் பஞ்சாங்கத்தில் கண்டுள்ள குறிப்பின் படி நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆறுதல் கூறுகின்றனர். சிலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories