நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரை கிளை

NIRMALADEV 1 - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை!

தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி நிர்மலாதேவி தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதி தண்டபாணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப் பட்டார். மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், இந்நிலையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். முன்னர் ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில், இன்று அதிரடியாக அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவினைப் பிறப்பித்தது.

மாணவிகளை தவறாக நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குறித்த பேட்டிகள், கட்டுரைகள் நக்கீரன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி, உள்நோக்கம் கொண்டவையாக குற்றம் சாட்டப் பட்டன. அரசின் மீதும், ஆளுநர் மீதும் களங்கம் கற்பிக்கும் விதத்தில் கட்டுரைகள் எழுதப் பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நிர்மலா தேவி ஜாமீனில் வெளியில் வந்தால், அவரை வைத்து ஊடகங்களில் மேலும் தேர்தல் அரசியலை திமுக., சார்பு ஊடகங்கள் மேற்கொள்ளும் என்று கூறப்பட்ட நிலையில், நிர்மலா தேவி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்மலாதேவி செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது சாட்சியங்களை கலக்கக்கூடாது என்று சில நிபந்தனைகளோடு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி, 331 நாட்கள் சிறையில் இருந்தார். இதே வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories