Home Blog Page 5856

அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது: எச்.ராஜா

சென்னை:

ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு போட்டி விவகாரம் தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிஉள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வழங்கிய அனுமதிக்கு தடை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரியும், இதற்கு  அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரியும் இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 11 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்கள் மீதான விசாரணை விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் அரிமா சுந்தரம் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது சட்ட விரோதம் என்றும், வன விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியதை சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் கூறினார். தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசு சார்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர்,  இது ஸ்பெயினில்  நடைபெறுவது போன்ற காளை வதை சண்டை அல்ல. தேவையெனில் ஜல்லிக்கட்டுக்கு  உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதிக்கலாம் என கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் 4 வார காலத்துக்குள் மத்திய மாநில அரசுகள் தடை நீக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறினர்.

இந்தச் செய்தியைக் கேட்டு, ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் இருந்த தென் தமிழக மக்கள் பெரும்  ஏமாற்றம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு இடைக்காலத் தடை : உச்ச நீதிமன்றம்

 
ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
 
இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
 
அதன் காரணமாக இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பான அரசு அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதை அடுத்து, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மனுதாரர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் முன்வைத்த வாதத்தின் போது, “மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
 
ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் ஏற்கெனவே தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்தப் போட்டி மிருக வதை தடைச் சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்கள்.
 
அவர்களுடைய வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை இன்று விசாரிக்கப்படும் என்று கூறினர். அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்ட னர்

திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் மரணமா ! ?

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சாலை விபத்ததில் அகால மரணம் அடைந்ததாக இன்று யாரோ ஒரு விஷமி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.

 

அவ்வாறு பரவிவரும் செய்தியில் லியோனி காரில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதல் மோதியதில் லியோனி இறந்ததாகவும் அந்த செய்தியை சரிபார்த்து கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

ஊடகதுறையினர் திண்டுகல் லியோனியை அவரது கைப்பேசியில் உடனடியாக தொடர்பு கொண்டபோது திண்டுகல் லியோனியே கைப்பேசி அழைப்பை எடுத்தார்.மேற்படி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தி பற்றி கூறியமைக்கு லியோனி அது தவறான தகவல் என்றும் திண்டுக்கல்லில் அவரது வீட்டில் நலமாக இருப்பதாகவும் சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

 

சமீப காலமாக சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரவிட்டு வதந்தியை பரப்புவது அதிகரித்துள்ளது.

 

வதந்தியை பரப்புவோர் மீது காவல் துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை தானாக முன் வந்து எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .

 

திண்டுக்கல் லியோனியுடன் சாலை விபத்து குறித்து ஊடகதுறையினர் அவரது கைப்பேசியில் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு லியோனி புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கோபமும் குணமும்: தேசிய இளைஞர் தினத்தில் ஒரு வாழ்வியல் நெறி

ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் சுவாமிஜியின்பால் பற்றுள்ளவர்கள். இது அரசின் அதிகாரபூர்வ நாளாகவும் அறிவிக்கப்பட்டால், விவேகானந்தரின் உலக சாதனையை நாடே நினைவுகூர்வதாக அமையும்!

காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இளைஞர் தினத்தை ஒட்டி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த… 2005இல் அழைத்திருந்தார் மடத்தின் தலைவர் சுவாமி தர்மாத்மானந்தர். (அன்பு ததும்பும் அவர் வார்த்தைகளால், இளையோர் பட்டாளம் அவரை மொய்ப்பதைக் காண ஆனந்தமாக இருந்தது.) சுவாமிஜியின் செய்தியை இளைஞர்களுக்கு சொல்வதைவிட வேறு மனநிறைவு என்ன இருக்கப்போகிறது! காரணம்- நாட்டைப்பற்றிய சிந்தனை; சமூகம் பற்றிய கோட்பாடு; எளியோரையும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் சமயம் / பக்தி மார்க்கம் – குறிப்பாக, வீரத்தை மையமாகக் கொண்ட அவரது கம்பீரம் போன்றவற்றை மாணவர்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமே!

ஒரு சுபாஷிதம்: (பொன்மொழி)

அச்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவச நைவச| அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பல காத:||

அச்வம் – குதிரை; கஜம் – யானை; வ்யாக்ரம் – புலி; அஜாபுத்ரம் – ஆட்டுக்குட்டி…

இந்த சுபாஷிதத்தின் பொருள்: (பலமுள்ள) குதிரையோ யானையோ புலியோ பலியிடப்படுவதில்லை; (பலவீனமான) ஆட்டுக்குட்டிதான் பலியிடப்படுகிறது. அதுபோல் (துர்பலனான) பலவீனமானவனுக்கு தேவர்களின் பெயராலும் துன்பமே நேரும். எனவே வீரம் நிறைந்தவனுக்குத் துன்பம் தர யாருமே சற்று யோசிப்பார்கள் என்பது புரிகிறதல்லவா?!

சுவாமிஜி இதை எளிமையாக “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!’ என்று ஒற்றை வாக்கியத்தில் முழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். வீரம் நெஞ்சில் இருக்கும்போது தானே பலம் வெளித்தெரிகிறது.

அந்த வீரம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? நல்ல குணமுள்ள எளியோருக்கு இரக்கம் காட்டவும், கொடுமதி படைத்த வலியோரை வீழ்த்தவும் உரமுள்ளதாக இருக்கவேண்டும். பலரும் வெற்று வார்த்தைகளால் வீரம் காட்டி, மனத்தால் கோழைகளாகிவிடுகிறார்கள். அவர்களிடம் வெளித்தெரிவது கோபம் – சினம் தானே ஒழிய வேறல்ல! அப்படிப்பட்டவர்களால் சுற்றமும் நட்பும் கெட்டுவிடுகிறது என்பது வள்ளுவர் வேதம். (சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி…)

வீரத்துக்கும் கோபத்துக்கும் நூலிழைதான் வேறுபாடு!

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் – என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்; சுயநலமிகள் என்பது என் எண்ணம். எப்படி? – வார்த்தை உக்கிரத்தால் பிறர் மனத்தைக் காயப்படுத்திவிட்டு, சொல்லாலும் செயலாலும் தன் கோபத்தைப் பிறர் மீது திணித்துவிட்டு, அடுத்த சில நொடிகளில் அவர்கள் அடங்கிப் போவார்கள். சமாதானம் பேசுவார்கள். காரணம் – காரியம் நடக்கவேண்டும். ஆனால் வார்த்தை வடுக்களால் காயமுற்ற பிறர் நெஞ்சோ, அந்த ரணத்திலிருந்து கொஞ்சமும் ஆறாமல் அப்படியே இருக்கும்.

ஸ்டீபன் கோவே என்பாரின் “90/10 கொள்கை’ கட்டுரையை ஒருமுறை வாசித்தேன். அந்தக் கட்டுரையின் சாரம்…

*** கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் – என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்; சுயநலமிகள் என்பது என் எண்ணம். எப்படி? – வார்த்தை உக்கிரத்தால் பிறர் மனத்தைக் காயப்படுத்திவிட்டு, சொல்லாலும் செயலாலும் தன் கோபத்தைப் பிறர் மீது திணித்துவிட்டு, அடுத்த சில நொடிகளில் அவர்கள் அடங்கிப் போவார்கள். சமாதானம் பேசுவார்கள். காரணம் – காரியம் நடக்கவேண்டும். ஆனால் வார்த்தை வடுக்களால் காயமுற்ற பிறர் நெஞ்சோ, அந்த ரணத்திலிருந்து கொஞ்சமும் ஆறாமல் அப்படியே இருக்கும்.

ஸ்டீபன் கோவே என்பாரின் “90/10 கொள்கை’ கட்டுரையை ஒருமுறை வாசித்தேன். அந்தக் கட்டுரையின் சாரம்…

10% வாழ்க்கை, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. 90% வாழ்க்கை, நீங்கள் அதற்கு ஏற்ப எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அந்த 10% த்தை நாம் கட்டுப்படுத்தமுடியாது. உதாரணத்திற்கு, பஸ், கார் பிரேக் டவுன் ஆவதையோ, ஏரோப்ளேன் தாமதமாவதையோ, டிரைவரால் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதையோ… குறிப்பாக பிறரால் நமக்கு நேரும் இதுபோன்ற விஷயங்களையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மீதமுள்ள 90% த்தைத் தீர்மானிப்பது நாமே!

ஒரு வாழ்க்கை உதாரணம்:

குடும்பத்தோடு காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் செல்ல மகள் காபி கொண்டு வருகிறாள். எதிர்பாராமல் கால் தடுக்கி கை அசைந்து காபி உங்கள் அழகான சட்டையில் அபிஷேகம் செய்துவிடுகிறது. இச்செயலுக்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. இச்செயலை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. காரணம் – எதிர்பாராமல் நடந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடக்க வேண்டியதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

ஆனால் நடப்பது? உங்கள் மகளைக் கோபத்தால் திட்டுகிறீர்கள். அஷ்டகோணலான உங்கள் முகத்தைக் கண்ட அப்பெண் உடனே காபிக் கோப்பையைத் தடாலெனப் போடுகிறாள். கண்களில் “பொலபொல’வென கங்கைப் பிரவாகம். திட்டிமுடித்தபிறகு உங்கள் மனைவியிடம் சொல்கிறீர்கள்… “”ஏன் காபிக் கோப்பையை சட்டை அருகே கொண்டு வந்து நீட்டவேண்டும்? அப்படி தொலைவிலேயே வைத்துவிடக் கூடாதா?” கேட்டுக் கொண்டே மாடியில் உங்கள் அறைக்குச் சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். அப்போதும் உங்கள் மகள் அழுதுகொண்டே மெதுவாகச் சாப்பிடுகிறாள் – வேண்டா வெறுப்பாக! பிறகு பள்ளி செல்லத் தயாராகி வெளியே வந்தால் பள்ளிப் பேருந்து போய்விட்டது… உங்கள் மனைவியோ உடனே செல்லவேண்டும்! என்ன செய்ய? மகளைக் காரில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள் – காரை வேகமாக ஓட்டியபடி! 40 கி.மீ வேக வரையறை மறந்து 60 கி.மீட்டரில் ஓட்டுகிறீர்கள். நேரமாகிவிட்டதே! போலீஸ்காரர்கள் சும்மாயிருப்பார்களா? உரிய தண்டத்தொகை செலுத்திவிட்டு பள்ளிக்குப் போனால், கார் கதவைத் தடாலெனத் திறந்து உங்கள் மகள் “குட்-பை’ கூட சொல்லாமல் பள்ளிக்குள் ஓடுகிறாள். பிறகு 20 நிமிட தாமதத்தில் அலுவலகம் நுழைந்தால், அவசரத்தில் முக்கியமான கைப்பெட்டி “மிஸ்ஸிங்!’ -அது வீட்டில்! உங்கள் நாள் மிக மோசமாக அன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவே தொடர்ந்தால் அன்றைய வேலைகள் அதோகதிதான்! எப்படியோ சமாளித்து மாலை வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கும் உங்கள் மனைவி மகளுக்கும் இடையே மவுனயுத்தம் தொடங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இது எதனால்? நீங்கள் காலையில் நடந்துகொண்ட முறை யினால். உங்கள் தினம் ஏன் அன்று மோசமானது?

1. காபியாலா? 2. மகளாலா? 3. போலீஸ்காரராலா? 4. உங்களாலா?

நிச்சயம் உங்களால்தான். காபியால் அன்று உங்களுக்கு நேர்ந்ததைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு அடுத்த 5 நிமிடங்களில் நீங்கள் நடந்து கொண்ட முறையே அன்றைய உங்கள் நாளைப் பாழாக்கியது. அதற்குப் பதிலாக, காபியை இப்படி சட்டையில் கொட்டிவிட்டோ மே என்று துணுக்குற்ற மகளிடம், “சரி, பரவாயில்லை; இனி இப்படிச் செய்யாதேம்மா’ என்று அன்போடு கூறி, அடுத்த நிமிடத்திலேயே மாடிக்குச் சென்று வேறுசட்டை மாற்றிக் கீழே வரும்போது உங்கள் செல்ல மகள் “டாடா’ சொல்லி வலியவரவழைத்த புன்னகையோடு “பஸ்’ ஏறியிருப்பாள். நீங்களும் 5 நிமிடம் முன்னதாக அலுவலகம் சென்று மேலதிகாரிகளிடம் “ஹவ் எ நைஸ் டே’ என்று புன்னகை பதிலைப் பறிமாறியிருக்கலாம்.

இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைப் பாருங்கள். 90% உங்கள் கைகளில்தானே உள்ளது. 90/10 கொள்கையை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க சில வழிகள்…

* உங்களைப் பற்றி தவறாக யாராவது சொல்லிக் கொண்டிருந்தால், கோபத்தை ஆயுதமாக்கக் கூடாது. கண்ணாடி அறையினுள் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதுபோல் மனத்தைத் தெளிவாக்கி அகன்று விடலாம். சூழ்நிலைக்குத் தக்க, பொறுமையோடு கையாளலாம்.

* வேகமாகச் சென்று கொண்டிருக்கும் உங்கள் காரை வழிமறித்தால்… வேலையிழப்பு நேர்ந்தால்… விமானமோ ரயிலோ தாமதமானால்… பார்க்கவேண்டிய நபர் இல்லாமல் போனால்… – இப்படி பல சந்தர்ப்பங்களில் 10/90 கொள்கையைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை இனிதாகும். அது உங்கள் கையில்… – இப்படி நீண்டுகொண்டே போகிறது ஸ்டீபன் கோவேயின் கட்டுரை.

*** வாரியார் சுவாமி ஓரிடத்தில் கோபம் பற்றிச் சொல்வார்… “”சூடான பால் ஆறவேண்டும் என்றால் அதை வேறு டம்ளரில் மாற்றி ஊற்றி ஆற்றவேண்டும். அதுபோல் சூடான சூழ்நிலையால் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தைவிட்டு அகன்று விடவேண்டும்.” – இது ஒரு வழி.

பிறர் உங்களைக் கோபப்படுத்தும்படி நடந்துகொண்டால் இப்படி நடந்துகொள்ளலாம். ஆனால் நீங்கள் பிறரைக் கோபப்படுத்தாமல் இருக்க ஒரு வழி உண்டு. பொதுவாகச் சொன்னால் – அடுத்தவர் குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசாமல் இருப்பது. பெரும்பாலும் மனிதன் அவதூறுகளைக் கண்டே கோபம் கொள்கிறான்.

குண தோஷௌ புதோ க்ருஹ்ணந் இந்துக்ஷ்வேளா விவேச்வர:| சிரஸா ச்லாகதே பூர்வம் பரம் கண்டே நியச்சதி||

உலகில் குணமே இருப்பவனும் குற்றமே இருப்பவனும் யாருமிலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால் விவேகியானவன், இரண்டையும் தெரிந்து கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய்விட்டு வெளிவிடாமலும், குணங்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடியும் வாழவேண்டும். இதற்கு உதாரணம் – சிவபெருமான்.

மகாவிவேகியான பரமசிவனுக்கு, ஆலகால விஷமும் சந்திரனும் கிடைத்தன. சந்த்ரமௌலீச்வரன் என்ற பேருக்குத் தக்கபடி, தண்ணொளி பரப்பும் வெண்ணிலாவைத் தன்தலையில் வைத்துக் கொண்டாடுகிறான். நீலகண்டன்; காலகண்டன் எனும் பேர்களுக்குத் தக்க, விஷத்தைத் தன் கழுத்தில் அடக்கி மறைத்துவிட்டான். ஆனால் உலகில் நாமோ, பிறர் குணங்களை மறைத்து குற்றங்களையே வெளியிடுவோராயுள்ளோம்!

மகனிடம் பாடம்கேட்ட அந்த அப்பனிடமிருந்து, பிள்ளைகள் கற்கவேண்டிய பாடம் இது என்று தோன்றுகிறது. ஆனால் குணம், குற்றத்துள் ஒருவனுக்கு எது அதிகமாக இருக்கிறதோ, அதையறிந்து, அவனை சேர்க்கவோ விலக்கவோ வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஒரு வகையில் இதுவும் நன்மை தருவதே!

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

– இது இந்தக் கருத்துக்கான வள்ளுவன் குறள்.

இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்

சினத்தை அடக்கல் சிறப்பு.

– இது முந்தைய கருத்துக்கான என் குரல்.

தேசிய இளைஞர் தினத்தில் ஓர் செய்தி!

 

16 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி!

அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அந்த நாளை முன்னிட்டு 40% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். எனக்கும் புத்தகங்கள் என்றால் அப்போதும் கொள்ளைப் பிரியம்தான்! புத்தகங்கள் வாங்கச் சென்றேன். முதல் முறையாக என்பதால் கையில் 50 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு சிறு சிறு புத்தகங்களை கொஞ்சம் வாங்கினேன்…

தைத்ரீயமந்த்ரகோஷம், தைத்ரீய உபநிஷதம் இத்யாதிகளை வாங்கிக் கொண்டு, மனத்தில் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரூ.46 சுமாருக்கு வந்தது. சரி போதும் என்று முடிவு செய்து, புத்தகங்களோடு வரிசையில் நின்று பில் போட்டு, கையில் வைத்திருந்த ரூ.50ஐயும் கொடுத்தேன். கூட்டம் அதிகமாக இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் மடத்தின் அந்த பிரம்மச்சாரி சுவாமி புத்தகங்கள், பில், அதோடு ரூ.50ம் 4 ரூபாய்க்கு நாணயங்களும் மீதி கொடுத்து அவசரப் படுத்தி அனுப்பினார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

ஆனால், நெருக்குதலால் அந்த இடத்தை விட்டு நான்கைந்து அடி வைத்து புத்தகக் கவரை வாங்கி நகர்ந்தேன். ஓ… அந்த பிரம்மச்சாரி சுவாமி நான் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு, ஐம்பது ரூபாயையும் சேர்த்துத் தந்தார் போலும்! எனக்கு நடந்த தவறு புரிந்தது. என் மனசாட்சிக்குத் தெரிந்து நான் கையில் ரூ.50தானே வைத்திருந்தேன். எனவே நாம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை புத்தகம் ஓசிக்குக் கிடைத்து மேலே நமக்கு நாலைந்து ரூபாய் சில்லறையும் கிடைத்திருக்கிறதே!

இப்போது என் மூளையின் இரண்டு பக்க பல்புகளும் எரிந்து அணைந்து எரிந்து அணைந்து ஏதோ இம்சைப் படுத்தின. தர்ம சாஸ்திரம் மண்டையில் ஏறிய ஒரு இளைஞனாக நெல்லை மண்ணில் இருந்தவரை நாம் இப்படி யோசித்ததே இல்லையே! சென்னை மண்ணை மிதித்த சில நாட்களில் இப்படியும் நம் மனம் எண்ணுமா? என் மனம் அடைந்த அவஸ்தையை வார்த்தைகளில் சொல்ல முடியாது! சிறு வயது முதல் சுவாமிஜியின் எழுத்துகளைப் படித்த நான், இப்படியும் நடக்கலாமோ?! மனம் திரும்பிய அதே நேரம் என் கால்களும் பின்னோக்கி நகர்ந்தன.

மீண்டும் வரிசையை ஒதுக்கித் தள்ளி, அதே பிரம்மசாரி சுவாமியிடம் போய், சுவாமி நான் கையில் ரூ.50தான் வைத்திருந்தேன். அவசரத்தில் நீங்கள் கொடுத்த சில்லறையைக் கவனிக்கவில்லை… என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் ஓ நான் ஏதாவது குறைவாக மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டேனா என்றார். இல்லை சுவாமி… அடியேன் கொடுத்த பணமே மீண்டும் அடியேனுக்கு வந்துவிட்டது. நான் தான் தவறுதலாக கூடுதல் பணம் வாங்கிக்கொண்டுவிட்டேன் என்று கூறி ரூ.50 ஐ திருப்பிக் கொடுத்து திரும்பினேன்.

இப்போது நான் படித்துக் கடைப்பிடித்த தர்மம் என் மனதை லேசாக்கி உற்சாகப் படுத்தியது. ஆவலுடன் புத்தகத்தைப் புரட்டினேன்…

தைத்ரீய உபநிஷத்தில் கண்ணுக்குத் தெரிந்தது. சீக்‌ஷா வ்யாக்யாஸ்யாம… உதட்டளவில் உச்சரித்தேன். கடைசிப் பக்கம் திருப்பினேன். சந்நோ மித்ர சம்வருண: சந்நோ பவத் வர்யமா… வருணன் நண்பனாகட்டும், அர்யமான், இந்திரன், பிருஹஸ்பதி எல்லோரும் நலம் செய்பவர்களாக ஆகட்டும்.. மனதில் யோசித்துக் கொண்டே வந்தேன்.

புத்தகத்தினூடே புக்மார்க்-வைத்துச் செருகுவதற்காக இலவசமாகத் தந்த சுவாமிஜியின் நின்ற படம் பக்கங்களினூடே தெரிந்தது. என் ஆதர்ஷ புருஷரான சுவாமிஜியின் கண்கள் தீர்க்கமாக என்னை நோக்குவது போல் தெரிந்தது. இப்போது உற்சாக நடை போட்டேன்!

பா.ம.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு : முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி

 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும்வேட்பாளர்கள் பட்டியல் பொங்கல் பண்டிகைக்கு பிறகுமுறைப்படி
வெளியிடப்படும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 
பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணையும் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், பா.ம.க.வை குறைகூற முடியாத சிலர் சாதி கட்சி என்ற வதந்தியை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, பா.ம.க. தலித் மக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று கூறிய அன்புமணி, சாதி பெயரால் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அமைப்புகளை மட்டுமே பா.ம.க எதிர்ப்பதாக தெரிவித்தார்.
 
மேலும், கடந்த காலத்தில் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்ததற்கு மன்னிப்பு கோரிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.
 
தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பலர் பா.ம.க.வில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாரத்தில் உள்ள தோணிமடுவு அணை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும், இதற்காக ரூபாய் 118 கோடி தேவைப்படுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து பேசி உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
இதேபோல, மேட்டூர் உபரி நீர் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், இதுவரை அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
 
வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பா.ம.க.வின் வேட்பாளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இதில் ஐம்பது விழுக்காடு இளைஞர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவர் என்றார். தமிழகத்தில் ஊழல் அமைச்சர்கள் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சிறை செல்வது உறுதி என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி கூறியுள்ளார்.

தினசரியின் பொங்கல் சிறப்பு பக்கம்; உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்

தினசரி டாட் காம்: முதலாமாண்டு சிறப்பிதழ்!

பொங்கல் திருநாள் சிறப்புப் பக்கம்!

தினசரி டாட் காமில் பொங்கல் சிறப்புப் பக்கம் தயாராகிறது! உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் செய்யுங்கள்!

தினசரி டாட் காம் துவங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. சென்ற 2015ம் வருடம் தை மாத முதல் நாளில் – பொங்கல் திருநாளில் தினசரி டாட் காம் துவங்கப் பட்டது. தமிழகத்தில் இருந்து நடத்தப்படும் ஒரு செய்தித் தளமாக, செய்தியாளர்களால் செய்தியாளர்களுக்கென துவங்கப்பட்ட  ஒரு முயற்சி. இம் முயற்சி வரும் தைப் பொங்கல் திருநாளுடன் ஓர் ஆண்டை எட்டுகிறது. இடையில் எத்தனையோ சோதனைகள், தடங்கல்கள். இவற்றைக் கடந்து இன்று வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறோம். இந்த முதலாண்டு சிறப்புப் பக்கங்கள், பொங்கல் சிறப்பு இதழாக தயாராகிறது. பொங்கல் தொடர்பான, உழவர் திருநாள், திருவள்ளுவர் திருநாள், காணும் பொங்கல், மாட்டுப்பொங்கல் என விழாக்கள் தொடர்பான கதை, கவிதை, கட்டுரைகள், செய்திகள், ஆலயங்கள், தமிழர் பாரம்பரியம், கலாசார நிகழ்வுகள் குறித்த தகவல்களை

dhinasarinews@gmail.com

மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

வெள்ளிக்கிழமை பொங்கல் தினத்தன்று தினசரி டாட் காமில் தேர்ந்தெடுக்கப்படும் உங்கள் படைப்புகளுடன் பொங்கல் சிறப்பு பக்கம் வெளியாகும்!

நன்றி,

தினசரி இணையம்.

பாஜக., பிரமுகர் கல்யாணராமன் கைதுக்கு ராம.கோபாலன் கண்டனம்

 சென்னை: ஒருதலைப் பட்சமாக முகநூல் கருத்துக்கு கைது செய்யும் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டிக்கிறோம்  என்று, பாஜக., பிரமுகர் கல்யாண ராமன் கைதுக்கு இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கல்யாணராமன் தனது முகநூல் பக்கத்தில் விவாதத்தின் போது தெரிவித்த கருத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்தை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் செயல்பாடு ஒருதலைபட்சமானது, சட்டவிரோதமானதும் கூட. உச்சநீதிமன்றம் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குக் கைது செய்யக்கூடாது என உத்திரவிட்டுள்ளது. இதனையும் மீறி முஸ்லீம் அமைப்பினரை திருப்திப்படுத்த இதுபோன்ற செயல்களில் காவல்துறை ஈடுபடுவது விரும்பத்தகாத செயல்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துவிடும் என எச்சரிக்கிறோம்.

இந்து இயக்கத்தினர் மீது அவதூறு பரப்பியும், இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தியும், ஆன்றோர்களை களங்கப்படுத்தியும் செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதற்கு நூற்றுக்கணக்கான புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையையும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளத்தக்கது. உதாரணமாக இஸ்லாமியப் பெண்களை கற்பழிக்க நான் கூறியதாக பொய்யான தகவல்களைப் பரப்பி களங்கம் ஏற்படுத்தி, வன்முறையைத் தூண்டியது குறித்து காவல்துறைக்குப் புகார் கொடுத்ததற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்பட வில்லை. அது மட்டுமல்ல, கொலை மிரட்டல் குறித்த கொடுத்த புகார்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தியதாகவோ, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதகாவோ எந்த தகவலும் இல்லை. நாம் கொடுக்கும் புகார்கள் கிணற்றில் போட்டக் கல்லைப்போல காவல்துறை வாங்கி வைத்துக்கொள்கிறது.

அதிமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகளின் ஏவலாளாக தமிழக காவல்துறை செயல்பட தமிழக முதல்வர் செயல்படுத்தவிட்டார் என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாகக் காட்ட முடியும். இதுவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போவதற்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது.

கருத்துரிமை பேசுவோர் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்டது என்றால் காணாமல் போய் விடுகிறார்கள்.  அதுதான் இடதுசாரிகளின் கோமாளித்தனமான போராளித்தனம். இந்த விஷயத்திலும் தமிழக அரசு முஸ்லீம்களின் அடாவடித்தனத்திற்கு அடிபணிந்துள்ளது. இது ஊடகத்துறைக்கும், கருத்துரிமைக்கும் எதிரான தளத்தை உருவாக்க தமிழக அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாய விரோதமானது. ஊடகத்துறைக்கு விடப்படும் அச்சுறுத்தல் என்பதை கவனத்தில் கொள்ள பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, தமிழக அரசும், காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

1. மாமனிதர்களில் ஒருவர்:

ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீ ராமானுஜர்

இந்தியாவில் ஸ்ரீ ஆதிசங்கரர்,  ராமானுஜர்,  மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை  ஏற்படுத்தினார்கள்.

அந்த வரிசையில் 19ம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும்  மறுமலர்ச்சியை,  மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் உலகில் 39 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். அந்த 39 ஆண்டுகளில் அவர், 1,500 ஆண்டுகளுக்கு மக்களுக்குத் தேவையான செய்தியைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

எனவே இந்த வகையில் சமீபத்தில் தோன்றிய சுவாமி விவேகானந்தர்,  பண்டைய நாளிலிருந்த ஆதிசங்கரர் போன்று ஓர் அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.

2. இப்படி ஒரு குரு,  இப்படி ஒரு சீடர்:

ஸ்ரீ ராமகிருஷ்ணரால் உருவாக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர். இது வரையில் உலக வரலாற்றில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்று இப்படி ஒரு குரு,  சுவாமி விவேகானந்தர்  போன்று  இப்படி ஒரு சீடர் இருந்ததில்லை.

3. கடல் கடந்து சென்ற முதல் ஹிந்து சந்நியாசி:

முன்பு,  ‘சந்நியாசிகள் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் செல்லக் கூடாது’ என்று ஒரு கருத்து நிலவியது. இந்தியாவின் ஆன்மிகத் தூதராகக் கடல் கடந்து சென்ற முதல் ஹிந்து சந்நியாசி சுவாமி விவேகானந்தர் தான்.

தற்காலத்தில் ஹிந்து சந்நியாசிகள் பலர் மேலைநாடுகளுக்குச் சென்று இந்துமதப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இது பாராட்டுவதற்கு உரிய மிகவும் நல்ல ஒரு முயற்சியாகும்.

இவ்விதம் இந்தியாவின் ஆன்மிகச் செல்வத்தை அந்நிய நாட்டு மக்களுக்கு வழங்குவது என்பதை, பிள்ளையார் சுழி இட்டு முதன்முதலில் சுவாமி விவேகானந்தர் தான் துவக்கி வைத்தார்.

4. இந்தியாவின் விஸ்வரூபம்:

மகாபாரதப் போர் நடந்தபோது ஸ்ரீ கிருஷ்ணன், அர்ஜுனனுக்குத் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினான். அப்போது தான் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் நிஜசொரூபம் புரிந்தது.

அதுபோன்று, “இந்தியா ஆன்மிக பூமி, இந்தியா தவ பூமி, இந்தியா ஞானபூமி, இந்தியா புண்ணிய பூமி, இந்தியாவின் முதுகெலும்பு ஆன்மிகம், இந்தியாவின் உயிர்நாடி ஆன்மிகம், இந்தியாவின் அடித்தளம் ஆன்மிகம், இந்தியாவின் இதயம் ஆன்மிகம்” என்பதை இந்திய மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, இந்தியாவின் விஸ்வரூபம் , இந்துமதத்தின் நிஜசொரூபம் ஆன்மிகம் தான் என்று எடுத்துக்காட்டிய ஆன்மிக இந்து சிங்கம் சுவாமி விவேகானந்தர்.

5. இந்திய மக்களைத் தலைநிமிரச் செய்தவர்:

இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தபோது, சரிந்து கொண்டிருந்த இந்து மதத்தைத் தாங்கும் இரும்புத் தூணாக சுவாமிஜி விளங்கினார்.

இந்து மதத்தின் இறையாண்மையை உலகிற்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் இறையாண்மையை உலகிற்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியர்கள் தங்களைப் பற்றி தாழ்வான எண்ணம் கொண்டிருந்தார்கள்; இந்து மதத்தையும் இந்தியர்கள் அப்போது இழிவாகவே கருதினார்கள். அத்தகைய ஒரு சூழ்நிலையில், இந்துக்கள், “நாங்கள் இந்துக்கள்   நாங்கள் இந்தியர்கள்” என்று தலைநிமிரச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.

Question markதங்களை இழிவாக நினைத்து கேள்விக்குறி போன்று வளைந்திருந்த இந்திய மக்களை, தங்களின் ஆன்மிகச் சிறப்பால் ஆச்சரியக் குறி போன்று தலை நிமிரச் செய்தவர்  பெருமிதம் கொள்ளச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியா தான் சுவாமி விவேகானந்தரின் கோயிலாக இருந்தது. இந்திய மக்கள் தான் அவர் வணங்கிய தெய்வங்கள்.

6.  லட்சியம் இருக்க வேண்டும்:

‘லட்சியத்துடன் வாழ வேண்டும்’ என்பது எல்லோருக்கும் பொதுவானது.
தனி மனிதனுக்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஓர் இயக்கத்திற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஒரு சமுதாயத்திற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும்.

லட்சியம் இல்லாத வாழ்க்கை, ‘ஏனோதானோ’ என்று இருளில் தட்டுத்தடுமாறிச் செல்லும் வாழ்க்கையாக இருக்கும். லட்சியம் இல்லாத வாழ்க்கை பயனற்றதாக இருக்கும்.
சுவாமி விவேகானந்தர் உலகிற்குப் பல அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்.   அவற்றில்,“எழுந்துகொள்ளுங்கள்! விழித்துக்கொள்ளுங்கள்! லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் செல்லுங்கள்!”  (Arise! Awake! and stop not till the goal is reached) என்ற அறிவுரையை  பொதுவாக மக்கள் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.

இந்த அறிவுரையை அவர் தமிழ்நாட்டில், கும்பகோணத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. இளைஞர்களிடம் நம்பிக்கை

“உடல் வலிமை,  மனவலிமை,  ஆன்மிக வலிமை ஆகிய ­மூன்று வகையான வலிமைகளையும் இந்திய மக்கள் பெற்றிருக்க வேண்டும்”என்று அழுத்தம்  திருத்தமாகக்  கூறியவர் சுவாமி விவேகானந்தர்.

தமிழக இளைஞர்களிடம் சுவாமி விவேகானந்தர் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்துகொள்ள வேண்டிய ஒரு தார்மீகக் கடமை, தமிழக இளைஞர்களுக்கு இருக்கிறது.

8. முழுமை பெற்ற இந்தியா:

‘புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்  இந்தியாவை மறுமலர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.  இந்தியா வல்லரசாக வேண்டும்’ என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம்.Viveka 2

ஆனால் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நீக்கிவிட்டு,  சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு,  புதிய இந்தியாவை உருவாக்குவது என்பது குறை (Incomplete) உடையதாகவே இருக்கும்;  அது  முழுமை பெற்றதாக ஒருபோதும் இருக்கவே இருக்காது  என்ற உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

.கட்டுரையாளர்: பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின் துறவி. மதுரையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின்  தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர்.