ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் போராட்டம் : விஜயகாந்த்
ஆங்கில புத்தாண்டு 2016 : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில் தே.மு.தி.க. தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் : பார்த்தசாரதி எம்.எல்.ஏ உள்பட 20 பேர் கைது
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்
குவைத்தில் மரணம் அடைந்த வாலிபரின் சடலத்தை பெற்று தர மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமை கொண்டவர் ஜெயலலிதா !! எதிர்க்கட்சிகள் ஒப்புதல் !!
எதிர்க்கட்சி தலைவர்களிடம் செய்தியாளர்கள் எந்த ஒரு கேள்வியை கேட்டாலும், இதே கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நீங்கள் கேட்க முடியுமா என எதிர் கேள்வி கேட்கிறார்கள்.
இதன்மூலம் ஓர் உண்மை தெளிவாக தெரிய வருகிறது.
அது, தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தி, ஆளுமை ஜெயலலிதாதான் என்பதுதான்.
இதை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள்.
அவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.
உண்மையிலேயே, தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தி ஜெயலலிதாதான்.
இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.
கனமழை, வெள்ளத்திற்கு பிறகு, அதிமுகவின் செல்வாக்கு வெகுவாக குறைந்தபோது, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை தனியாக எதிர்த்து நிற்க திமுகவிற்கு இன்னும் துணிச்சல் வரவில்லை.
தேமுதிக போன்ற கட்சிகளின் தயவை நாடி திமுக சென்றுக் கொண்டிருக்கிறது.
கூட்டணியில் சேர வருமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
இதன்மூலம், அதிமுகவை தனித்து சந்திக்க முடியாது என்பது அவருக்கு தெரிகிறது.
அந்த கிலியில்தான், கூட்டணியில் சேர வாருங்கள் என ஒவ்வொரு கட்சியையும் கூவி கூவி அழைக்கிறது திமுக.
இப்படிப்பட்ட நிலையில், இன்று (31.12.2015) கூடும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து அனைவரும் வியக்கும் வகையில் ஜெயலலிதா துணிச்சலான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.
ஆளும் கட்சி மீது பல்வேறு புகார்கள் இருந்தும், தேர்தலை துணிச்சலுடன் சந்திக்கும் மனநிலை, தைரியம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருக்கிறது.
எந்த ஒரு கட்சியையும், கூட்டணியில் சேர வாருங்கள் என இதுவரை அதிமுக அழைக்கவில்லை.
இனியும் அழைக்காது என்றே தெரிகிறது.
அந்த அரசியல் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.
அதனால்தான், தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக, ஆளுமை கொண்டவராக அவர் கருதப்படுகிறார். இனியும் கருதப்படுவார்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்,
பத்திரிகையாளர்.
செய்தி பதிவை இப்படி சமூக ஊடகங்களில் தவறாகப் போட்டால் காறித் துப்பாம விடுவாங்களா ? என்னமா சொல்லுறீங்க ?
தொழிலாளர் புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை:
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
”தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது. அனைத்து மாநிலங்களும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை அந்தந்த மாநில அரசே நிர்ணயித்துக் கொள்கிறது. தற்போது, மத்திய அரசு தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய சட்டத்தை கொண்டுவர உள்ளது.
இந்த ஊதியச் சட்ட திருத்தத்தில் மத்திய அரசு பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரம், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, மருத்துவம், விடுப்பு, இன்சூரன்ஸ், இஎஸ்ஐ போன்றவற்றை உறுதிப்படுத்திடும் வகையிலும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டும் இந்த புதிய ஊதியச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் உழைப்பின் மூலமே தொழில் வளர்ச்சி பெறும், தொழில்களும் பெருகும், நாடும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும். எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்”
சென்னை கோவை நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளையும், நவீன வசதிகளையும் கொண்ட 100 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.48 ஆயிரம் கோடி செலவிட மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டிய ‘ஸ்மார்ட்’ நகரங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் 12 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் அமையவிருக்கும் ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான வரைவு அறிக்கையை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
ஆனால் தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்பு இருந்ததால், திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த பட்டியலை மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்துள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள இந்த வரைவுகளை தலா 2 நிபுணர்கள் கொண்ட 3 குழுக்கள் மூலம் மத்திய அரசு ஆய்வு செய்யும். பரிசீலனையின் முடிவில் இந்த நிதி ஆண்டில் நிதி உதவி அளிக்கப்படும் ‘ஸ்மார்ட்’ நகரங்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.

