Home Blog Page 5890

தெலுங்கானா முதலமைச்சர் மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து : பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து

 
 
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், 4 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
 
இந்த தீவிபத்து காரணமாக, இன்று யாகத்தில் பங்கேற்பதாக இருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
 
மெடக் மாவட்டத்தின் எர்ரவெல்லி கிராமத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் பண்ணை வீடு உள்ளது. அவரது பண்ணை வீட்டில் “அயுதசண்டி மஹா யாகம்’ புதன்கிழமை தொடங்கியது. இந்தயாகம், உலக அமைதி வேண்டி நடத்தப்படுகிறது. மஹாயாக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் முதன்மை யாகப் பந்தலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
 
தெலுங்கானாவில் நடத்தப்படும் இந்த யாகத்திற்கு மிகப் பெரிய அளவில் செலவு செய்யப்பட்டு உள்ளது. கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டது.
 
மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்கள் நீடித்துவரும் நிலையில் இவ்வளவு செலவில் யாகம் நடத்துவதும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. விபத்து தொடர்பான முழு தகவல்கள் வெளியாவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

 

ஊடக துறையினர் முகத்தில் காறி துப்பி கீழ்த்தரமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்

 
 
சென்னை மத்திய கைலாஷில் இன்று செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பத்திரிகைகாரங்களா நீங்க தூ என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
 
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூட்டணியில் தேமுதிக இருப்பதாக கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும். கூட்டணிக்கு வருமாறு அழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய காலம் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். அதிமுகவின் 37 எம்பிக்கள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என்ன செய்தார்கள்.
 
2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்காது. கலைஞர், ஜெயலலிதாவை சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்றார்.
 
இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது;
 
இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே… பயப்படுவீங்க. பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ…என்று துப்பினார்.
 
ஊடக துறையினர் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அதில் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மதிப்போம் என்று உறுதிமொழியேற்று, “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை அவர் கண்ணியக்குறைவாக மதிக்கத்தவறியுள்ளார் என ஊடக துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
பல்வேறு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஊடக துறை சார்ந்த சங்க அமைப்புகள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
 
ஊடக துறையினர் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவ காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
COURTESY & VIDEO SOURCE : puthiyathalaimurai.tv

 

சினிமா இணையதளத்திற்கு நிதியுதவி அளித்த சூர்யா

சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com, வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக, தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம், மற்றும் இதர முதலீட்டாளர்கள் சஞ்சய் அர்ஜுன்தாஸ் வாத்வா (முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்), வெளிநாட்டு வாழ் இந்தியர்களான பாலாஜி பஞ்சபகேசன் (UK), ஷங்கர் வெங்கடேசன் (Poland), மற்றும் வசிகரன் வெங்கடேசன் (USA) இருந்து தங்களின் முதல் சுற்று முதலீட்டை பெற்றுள்ளனர்.

2014ல் தொடங்கப்பட்ட 2D Entertainment நிறுவனம், 36 வயதினிலே, பசங்க 2 போன்ற தரமான படங்களை தயாரித்துள்ளது. மேலும் அடுத்து சூர்யா நடித்து கொண்டிருக்கும் பிரமாண்ட படமான “24” படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரு முன்னோக்குப் பார்வையோடு இயங்கும் நிறுவனமாக, நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விளைகிறோம், அதன் வழியாகவே இந்த முயற்சியில் நாங்கள் முதலீடு செயுதுள்ளோம்”. என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜசேகர் பாண்டியன் கூறியுள்ளார்.

“நானும் என் சகோதரன் ஆதியும் மிகுந்த ஆவலுடன் எங்கள் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட காத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா போன்ற முன்னணி நடிகர் இதில் விருப்பம் காட்டியது, எங்களை சிறந்த முறையில் ஊக்குவிப்பதாக இருக்கிறது” என இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.

இந்த முதலீட்டில் பெரும் பங்கினை திரைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளர் கையகப்படுத்தலில் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டு இருகின்றது. திரைபடங்கள் விநியோகம் செய்ய ஒரு தரமான மாற்று வழியினை கொண்டு வந்து Piracy ஒழிக்கும் இந்நிறுவனத்தின் நோக்கத்தில், இது பெரும்வாரியாக உதவும்.

நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம்

பாவூர்சத்திரத்தை அடுத்த நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது

முகாமினை பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் இணைந்து துவக்கி வைத்தனர்

முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் ,உப்பு கரைசல் நீர் வழங்கப்பட்டது

வட்டார மருத்துவ அலுவலர் ராஜ் குமார் ,மருத்துவர்கள் மணிமாலா ,ஹம்சுல்குதா ஆகியோர்  இணைந்து சிகிச்சை அளித்தனர் ,

நிகழ்ச்சியில் பாபு ராஜா ,ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானஅருள் பொன்னுத் தாய் ,ஊராட்சிகழக செயலாளர் திருமால் முருகன் , அம்மா பேரவை வேல்முருகன் , இருளப்பன் , அருள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் , சேர்மன் பொன்னுப்பாண்டி, கைலாசம் ,கனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

முகாம் ஏற்படுகளை வட்டார சுகாதார ஆய்வாளர் இசக்கியப்பா செய்திருந்தார்

தேமுதிக சார்பில் இரத்ததான முகாம்

தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி வருகின்றனர் சென்னை  பகுதியில் இரத்ததான முகாமை  தேமுதிக தலைவர் விஜயகாந்த் துவக்கி வைத்தார்

அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்

 
 
தமிழக தலைமை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் 3 வருடம் பணியாற்றிய அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 20–ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
 
இந்த பட்டியல் வெளியான பின்பும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
 
தமிழக தேர்தல் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையர்கள் இந்த மாத கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருகிறார்கள். அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறும்.
 
வாக்காளர் பட்டியல் வெளியாவதால் 20–ந்தேதி வரை கலெக்டர் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி., ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் தேர்தல் பணியில் சம்பந்தப்பட்ட யாரையும் இடமாற்றம் செய்ய முடியாது. அதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டும்.
 
20–ந்தேதிக்கு பிறகு யாரையும் இடமாற்றம் செய்து கொள்ளலாம். இதுபற்றி தேர்தல் கமிஷனின் உத்தரவை மேற்கொள் காட்டி தலைமை செயலாளர் ஞானதேசிகனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 
31.5.2012–க்கு பிறகு 3 வருடம் ஒரு இடத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம் என்று அதில் கூறி இருக்கிறோம் என்று ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4 பேர் பலி, 100 பேர் படுகாயம் : பொதுமக்கள் பீதி

 

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை உலுக்கியது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கி இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில்
89 பேரும், ஆப்கானிஸ்தானில் 12 பேரும் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.44 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 203 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் வீடுகளில் உறங்கிக் கொண்டி ருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிக்கு ஓடி வந்தனர்.

இதனால் பீதி அடைந்த மக்கள் நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தெரியாமல் இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் படுகாயமடைந்தவர்கள் பெஷாவர், லாகூர் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கில்ஜிட்– பலுகிஸ்தான் மாகாணத்தில் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என முதல்–மந்திரி ஹபீஷ் ஹபீசுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கும் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் திடீர் சந்திப்பு

 
 
தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்துப் பேசினார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது சொந்தப் பணம் ரூ.20 கோடி செலவில் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். கடந்த 23–ந்தேதி தொடங்கிய இந்த யாகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
 
2 ஆயிரம் பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்துகிறார்கள். இந்த யாகத்தில் சந்திரசேகர ராவ் தனது மனைவியுடன் தினமும் கலந்து கொள்கிறார். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
 
மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், ராம்பூர் மடாதிபதி மாதவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீபீட மடாதிபதி பரிபூரனாந்தா சுவாமிகள், திரிதண்ட மடாதிபதி சின்ன ஜீயர் ஆகியோரும் பூஜையில் கலந்து கொண்டனர். அவர்களிடம் சந்திரசேகர ராவ் ஆசி பெற்றார். அதோடு தினமும் குங்கும பூஜை நடக்கிறது.
 
நேற்று நடைபெற்ற யாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழ்நாடு கவர்னர் கே.ரோசைய்யா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.சுபிராம ரெட்டி, ஆந்திர முன்னாள் மந்திரி கீதா ரெட்டி, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.வி.ரமணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
ஒவ்வொரு நாள் பூஜையிலும் 6 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள். பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, ஜாக்கெட், மகாசண்டி டாலர் போன்ற மங்கள பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் தினமும் பெண்கள் கூட்டம் கூட்டமாக யாக பூஜைக்கு வருகிறார்கள். அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படுகிறது. யாகத்தில் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் ஆடை அணிகிறார்கள்.
 
முதல் நாள் மஞ்சள் ஆடையிலும் அடுத்த நாள் ரோஸ் வண்ண ஆடையிலும் அனைவரும் பங்கேற்றனர். நேற்று வெள்ளை ஆடையில் அனைவரும் காட்சி அளித்தனர். சந்திரசேகர ராவ் கூட இதே வண்ணத்தில் ஆடை அணிந்து இருந்தார். பத்திரிகையாளர்களுக்கு கூட இதே ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது, இன்றுடன் (27–ந்தேதி) இந்த சண்டி யாகம் நிறைவு பெறுகிறது.
 
இன்றைய பூஜையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்காக, தெலுங்கானாவுக்கு வந்துள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தமிழக ஆளுநர் ரோசைய்யா மரியாதை நிமித்தமா இன்று சந்தித்துப் பேசியதாக சென்னை மாளிகை வட்டார தகவல் கூறுகிறது.

விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

 
காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும், அவர் வந்தால் மகிழ்ச்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .
 
காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்ற முப்பெரும் விழா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
 
 
அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தாவது:
 
தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக சந்திப்பது வழக்கமானதுதான். காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சி. பாஜகவினர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவோம் எனக் கூறினர். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தடை நீங்கவில்லை. கூட்டணி குறித்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் முடிவு செய்யப்படும். இப்போதைக்கு வெள்ள நிவாரணப் பணிகளில்தான் கவனம் செலுத்தி வருகிறோம் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார் .

விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை வெளியிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

 
விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் .
 
விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அழகு முத்துக்கோன் தபால் தலையை வெளியிட்டனர். அதனை தபால்துறை அதிகாரி சார்லஸ் பெற்றுக்கொண்டார்
 
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விழாவில்
பேசியதாவது :–
 
அழகு முத்துக்கோன் போன்ற விடுதலை வீரர்களின் பெருமைகளை நன்கு அறிந்துள்ளேன். இவரை போல நமது தேசத்துக்காக பாடுபட்ட விடுதலை வீரர்கள், புரட்சியாளர்கள் உள்ளிட்டோரின் பெருமைகளை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பறைசாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் விடுதலை வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களது சாதனைகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
 
உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் பிரதமர்களில் நரேந்திர மோடிக்கு தனி இடம் உள்ளது. இன்னும் 5 வருடங்களில் இந்தியாவை வளர்ந்த நாடுகள் பட்டியலில் சேர்த்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் புகழை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை பிரதமர் மோடியையே சாரும். அழகுமுத்துக்கோன் புகழ் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பப்படும் என்று இங்கே நான், பாரதீய ஜனதா கட்சி சார்பில் உறுதி அளிக்கிறேன் என்று ரவிசங்கர் பிரசாத் பேசினார்.
 
 
விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
 
தற்போது விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் தபால் தலை வெளியிடுவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் பெருமை அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கே பெருமையான விஷயம். அவர் நாட்டுக்காக வாழ்ந்ததை விட தர்மம் எப்போதும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே வாழ்ந்து மறைந்துள்ளார். யாதவர் சமூகத்தினர் எப்போதும் நன்றிக்கு இலக்கணமாக இருக்கக்கூடியவர்கள்.
 
வருகிற தை திருநாளில் நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடக்கும். நடக்கும்… நடக்கும்… அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சில சட்டச் சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கின்றன. அவை சரி செய்யப்பட்டு வருகிற பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான முயற்சியில் தான் நாங்கள் இப்போது இறங்கி உள்ளோம் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
 
விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் முரளிதரராவ் பேசியதாவது:–
 
 
பிரதமர் மோடி தேச தியாகிகளை கவுரவப்படுத்தி வருகிறார். இந்த அரசுதான் தியாகிகளை கவுரப்படுத்தும் அரசாக இருக்கிறது. பசு மிகவும் புனிதமானது. பசுவையும் பாதுகாக்கும் அரசாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்குள்ள தடை நீங்க பிரார்த்திக்கிறேன் என்றார்.
 
இவ்விழாவில், பூபேந்தர் யாதவ் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.