அதிமுக நடத்தும் தமிழக அரசாங்க ஆட்சியில் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் : மருத்துவர் ராமதாஸ்
பீப் பாடல் பிரச்சனை : நடிகர் சிம்புக்கு அதரவாக ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி
நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு பாடியதாக சமீபத்தில் பீப்… பீப்… பாடல் ஒரு இணையதளத்தில் பீப் பாடல் வெளியானது.
அந்த பாடலில் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோவை, சென்னையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சிம்பு பாடிய பாடலை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். அதில் சிம்புவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பீப் பாடலை வெளியிட்ட கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. திண்டுக்கல்லில் மாவட்ட இணை ஆட்சியர் அலுவலகம்,
பேருந்து நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலக சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. சிம்பு ரசிகர்கள் ஒட்டிய அந்த சுவரொட்டி திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
சுங்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
தேர்தல் கூடுதல் நிதி திரட்ட தொண்டர்களுக்கு வேண்டு கோள்விடுத்த கருணாநிதி
தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது
திருச்சி மாவட்டம், முசிறியில் நேற்று தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காவல் துறையினர்கைது செய்தனர்.
முசிறி அருகேயுள்ள தெற்கு திரணியாம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி தங்கம்மாள். இவரது மகன் சுப்பிரமணி (மனநலம் பாதிக்கப்பட்டவர்). இவரை கடந்த 1 வாரமாக காணாமல் தங்கம்மாள் பல இடங்களில் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், முசிறி புதிய பேருந்து நிலைய பகுதியில் தனது மகன் இருப்பதை அறிந்த தங்கம்மாள் அங்கு சென்று, மகனை வீட்டுக்கு வருமாறு கூறி கையை பிடித்து இழுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது தாயை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது தாய் இறந்ததுகூட தெரியாமல் அருகிலேயே அமர்ந்திருந்தார் சுப்பிரமணி.
நடைபெற்ற சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி காவல் நிலையத்தினர் வந்தவுடன் அங்கிருந்து ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.
குதிரை சவாரி செய்த லாலு மகன் : பா.ஜ.க கடும் கேள்விக்கணை
ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றும் மத்திய, மாநில அரசுகள் : ராமதாஸ்
அரசியல் வாதிகளுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போகிறதா ?
படம் !
முதல்வரை
இனி நாம்
இழிவு படத்த தேவையில்லை
அவரே
அவரை
அதிக
அசிங்க படுத்தி கொண்டார்
(எடுத்துக்காட்டு)
பாதிக்க பட்டோர்களுக்கு
வழங்க படும்
உணவு பொட்டலங்களில்
மாண்பு மிகு முதலமைச்சரின் படம்
அதை வாங்கி
தின்று விட்டு
நமது தோழர்கள்
அதை காலடியில் மிதிக்கிறார்கள்
குழந்தைகள் அசிங்கம் செய்தால்
சுத்த படுத்தவும் உபயோகிக்கிறார்கள்
பெரியவர் கள் கூட
அவசரத்து ஒதுங்க
அந்த காகிதத்தைதான் உபயோகிக்கிறார்கள்
அதை விட பெருத்த அவமானம்
அம்மா என தலையில் வைத்து கொண்டாடிய
கட்சி ஆளுங்களே
அந்த செயலை செய்வதுதான்
இதை விடவா
நாம் அந்த அம்மாவை கேவல படுத்திவிட முடியும் ?
இதயத்தில் நீ இருந்தால் !
நான்
இராணுவத்தில் சேர்ந்து
யுத்தத்தில்
எதிரி யிடம்
சிக்கி கொண்டால்
என்னை
மார்பில் சுடுங்கள் என்று
நெஞ்சை நிமிர்த்தி கொண்டு
நிற்க மாட்டேன் !
ஏனென்றால் ?
இதயத்தில்தான்
நீ இருக்கிறாய் !
எனக்கு காயப்பட்டடாலும்
பரவாயில்லை
உன்னை காயம் பட விட மாட்டேன்

