Home Blog Page 5891

அதிமுக நடத்தும் தமிழக அரசாங்க ஆட்சியில் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் : மருத்துவர் ராமதாஸ்

 
 
அதிமுக நடத்தும் ஆட்சியில் தமிழக அரசாங்கம் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
 
தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை நேற்று பார்வையிட்ட ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது : –
 
தமிழகத்தில் தற்போது தேர்தல் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரை நடக்கும். இதனை நீங்களும், நாங்களும், மக்களும் ரசிக்கலாம். அன்புமணியை முதல்வராக ஏற்றுக்கொண்டு, பாமகவுடன் கூட்டணி அமைக்க பாஜக வரும் என நம்புகிறோம். அப்படி வந்தால் துணை முதல்வர் பதவி அவர்களுக்கு வழங்குவோம். தமிழகத்தில் 5 அணிகள் இருக்கும். திமுக, அதிமுக, இதற்கு மாற்றாக பாமக, அதற்கு பிறகு மற்ற கூட்டணிகள் வரும்’
முன் எப்போதும் இல்லாத அள வுக்கு அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டுள்ளது. ரூ. 4.2 லட்சம் கோடி கடன் உள்ளது. எளிதாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையை அடமானமாக வைத்து ரூ. 60 ஆயிரம் வரை கடன் பெற்று ஆட்சி நடத்துவதாக தெரிவித்தார் .
 
சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், கடலூர், மாவட்டங்களைப் போல் தூத்துக்குடியும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மோட் டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப் பட்டபோதும், அது எங்கே செல்கிறது என்று அதிகாரிகளுக்கே தெரிய வில்லை. தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது.
 
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு ஆளும் கட்சி யினரே காரணம். ஏரி, குளங்கள், வரத்து கால்வாய்கள் திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிக்கப்பட்ட தும் முக்கிய காரணம்.
 
பொதுவாக குடிசைகள்தான் வெள் ளத்தில் மூழ்கும். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமே வெள் ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தான் குடி மராமத்து பணி நடைபெற்றது. அதற்கு பிறகு இப்பணிகள் நடக்கவில்லை. ஏரி, குளங்கள் உடையும் நிலையில் இருந்தால், ஊர்மக்கள் சென்று அடைப்பார்கள், இன்று ஒப்பந்ததாரர்களால் பணிகள் செய்யப்படுகின்றன. மக்கள் இதை வேடிக்கை பார்க்கின்றனர். இதில் மக்களுக்கு ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது
என்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

பீப் பாடல் பிரச்சனை : நடிகர் சிம்புக்கு அதரவாக ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி

 

நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு பாடியதாக சமீபத்தில் பீப்… பீப்… பாடல் ஒரு இணையதளத்தில் பீப் பாடல் வெளியானது.

அந்த பாடலில் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோவை, சென்னையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே சிம்பு பாடிய பாடலை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். அதில் சிம்புவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பீப் பாடலை வெளியிட்ட கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. திண்டுக்கல்லில் மாவட்ட இணை ஆட்சியர் அலுவலகம்,
பேருந்து நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலக சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. சிம்பு ரசிகர்கள் ஒட்டிய அந்த சுவரொட்டி திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

சுங்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

 
 
சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ராணி மெய்யம்மை அரங்கில் செயல்பட்டு சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (26-12-2015 ) தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
 
நேற்று காலை 7 மணியளவில் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வரும் 3–வது மாடியில் கரும்புகை வெளியேறியது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
 
தகவலின் பேரில், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அலுவலர்களான விஜயகுமார், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 30–க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
 
கடந்த 2 தினங்களாக அரசு விடுமுறை என்பதாலும், காலை நேரத்தில் நடந்ததாலும் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. எனவே தீயணைப்பு வீரர்கள் ஸ்கை லிப்ட் எனப்படும் உயரமான ஏணி கொண்டு ஜன்னல் வழியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
பின்னர் ஊழியர்கள் வந்து கதவை திறந்ததால் வீரர்கள் அறைக்குள் சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்கள் மற்றும் சேர் உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள் எரிந்து முழுமையாக நாசமாயின.
 
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம ஆசாமிகள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் எழும்பூர் காவல் நிலையத்திவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் வருகின்றனர்.
 
 

 

தேர்தல் கூடுதல் நிதி திரட்ட தொண்டர்களுக்கு வேண்டு கோள்விடுத்த கருணாநிதி

 
 
 
திமுக கட்சியினர் இதுவரை திரட்டிய 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிதி முக்கியமான செலவுகளுக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் நிதி திரட்டித் தருமாறு திமுக தலைவர் கருணாநிதி கட்சித் தொண்டர்களுக்கு வேண்டு கோள்விடுத்துள்ளார்.
 
தேர்தல் நிதி தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிதியாக இதுவரையில் 21 கோடியே 93 லட்சத்து 96,534 ரூபாய் சேர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
 
அதிமுகவினர் வைத்துள்ள நிதியை ஒப்பிடும்போது இது கடுகளவுதான் என்று கூறியுள்ள கருணாநிதி, இந்த தேர்தல் நிதி, தேர்தலைச் சந்திப்பதில் முக்கியமான செலவுகளுக்குக்கூடப் போதாது என்று தெரிவித்துள்ளார்.
 
எனவே கூடுதல் தேர்தல் நிதி திரட்டப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர், அக்கட்சித் தொண்டர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு எந்த ஒரு தொகையையும் தேர்தல் நிதியாக வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். வெள்ளிக் காசுகளாக இருந்தாலும் கூட, அதை தான் தங்கக் காசுகளாகக் கருதி பெற்றுக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இப்போது கொடுத்துள்ள நிதி போதவே போதாது என்பதை உணர்ந்து, பெருநிதியைக் கொண்டு வந்து தி.மு.க. நிதியோடு சேர்ப்பதிலும், தேர்தல் பணிகளைத் தொய்வில்லாமல் ஆற்றுவதிலும் தொண்டர்கள் முனைப்புக் காட்டிட வேண்டும் என்றும் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

 

திருச்சி மாவட்டம், முசிறியில் நேற்று தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காவல் துறையினர்கைது செய்தனர்.

முசிறி அருகேயுள்ள தெற்கு திரணியாம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி தங்கம்மாள். இவரது மகன் சுப்பிரமணி (மனநலம் பாதிக்கப்பட்டவர்). இவரை கடந்த 1 வாரமாக காணாமல் தங்கம்மாள் பல இடங்களில் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், முசிறி புதிய பேருந்து நிலைய பகுதியில் தனது மகன் இருப்பதை அறிந்த தங்கம்மாள் அங்கு சென்று, மகனை வீட்டுக்கு வருமாறு கூறி கையை பிடித்து இழுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது தாயை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது தாய் இறந்ததுகூட தெரியாமல் அருகிலேயே அமர்ந்திருந்தார் சுப்பிரமணி.

நடைபெற்ற சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி காவல் நிலையத்தினர் வந்தவுடன் அங்கிருந்து ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.

 

குதிரை சவாரி செய்த லாலு மகன் : பா.ஜ.க கடும் கேள்விக்கணை

 
கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன்தினம், தன் பெற்றோர் வீட்டிலிருந்து, அரசு வீட்டிற்கு பீஹார் மாநில சுகாதார துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர்லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ், குதிரைச் சவாரி செய்ததை,பாரதீய ஜனதா கட்சி கடுமையான
கேள்விக்கணையை எழுப்பியுள்ளது.
 
பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு உள்ளது.
 
இந்த அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் நேற்று முன்தினம், பாட்னாவில் உள்ள தன் பெற்றோர் வீட்டிலிருந்து, அரை கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள, தன் அரசு வீட்டிற்கு குதிரையில் சென்றார். அப்போது, மற்றொரு குதிரையில், தேஜ் பிரதாப்பிற்கு பயிற்சி அளிக்கும் ஜாக்கி உடன் வந்தார். இவர்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் சென்றனர். குதிரையில் அரசு வீட்டிற்கு சென்றதும், நிருபர்களிடம் பேசிய பிரதாப், ”சில ஆண்டுகளுக்கு முன், குதிரைச் சவாரியை நான் தொடர்ச்சியாக செய்து வந்தேன்; பின் விட்டு விட்டேன். தற்போது மீண்டும் குதிரைச் சவாரி செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்
 
 
பீஹார் தலைநகர் பாட்னாவிலும், மாநிலத்தின் மற்ற சில நகரங்களிலும், காற்று மாசு அதிகரித்துள்ளது. அதை குறைக்க வேண்டும் எனில், இதுபோன்ற குதிரைச் சவாரிகளை மேற்கொள்வது அவசியம் என்றும், அவர் மேலும் கூறினார். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
 
 
 

 

ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றும் மத்திய, மாநில அரசுகள் : ராமதாஸ்

 
ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உண்மையான அக்கறை காட்டாமல், வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு இப்போதைய மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இடைக்காலத் தடை விதித்தது. எனினும் அப்போதைய தமிழக அரசு அளித்த உறுதிமொழி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்- 2009 ஆகியவற்றை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டது.
 
ஆனால், 2011-ஆம் ஆண்டில் விலங்குகள் நல அமைப்புகள் அளித்த அழுத்தங்களுக்கு பணிந்து, வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளையும் சேர்த்து அப்போதைய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிக்கை பிறப்பித்தார். அதுதான் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. ஜெய்ராம் ரமேசுக்குப் பிறகு தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பேற்ற போதிலும், அவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்வதில் ஆர்வம் காட்டினார். அதனால் தான் 2014-ஆம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2011 ஆம் ஆண்டு அறிவிக்கையை திரும்பப்பெறுவதாக கடைசி நேரத்தில் மத்திய அரசு கூறினாலும் அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
 
வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்து ஐக்கிய முற்போக்கு அறிவிக்கை வெளியிட்டிருக்காவிட்டால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த எந்த தடையும் ஏற்பட்டிருக்காது. ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாக்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியதாக கூறிக்கொள்ளும் தி.மு.க. தலைவர் கருணாநிதி 2011-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவிக்கை பிறப்பிக்காமல் தடுத்திருக்க வேண்டும். மத்திய அரசில் செல்வாக்குடன் இருந்த தி.மு.க.வுக்கு அது சாத்தியம் தான். ஆனால், அந்த நேரத்தில் 2ஜி ஊழல் வழக்கில் இருந்து தமது குடும்பத்தினரை காப்பதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட ஜல்லிக்கட்டு போட்டிகளை காப்பாற்றுவதில் காட்ட வில்லை. ஆனால், இப்போது அதையெல்லாம் மறைத்து விட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுவது ஏமாற்று வேலை.
 
ஜல்லிக்கட்டு தொடர்பான சிக்கலில் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்தது மிகப்பெரிய துரோகம் ஆகும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து 07.05.2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து 19.05.2014 அன்று தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 18 மாதங்கள் ஆன பிறகும் அவ்வழக்கை விசாரணைக்கு கொண்டுவர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்விளைவு தான் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாததுடன் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.
 
இன்னொரு புறம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி பெற்றே தீருவோம் என்று கடந்த ஓராண்டாக கூறிவரும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களும் இதுவரை பயனுள்ள வகையில் எதையும் செய்யவில்லை. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய பின்னரும் கூட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வசதியாக 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் வாக்குறுதி அளித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்து விட்ட நிலையில் சட்டத்திருத்த முன்வரைவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கூட பெறப்படவில்லை. தில்லியில் நடைபெறும் நகர்வுகளை பார்க்கும்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வசதியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
 
ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பொருத்தவரை கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தன. இப்போது பாரதிய ஜனதா கட்சியும், அ.தி.மு.க.வும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளைத் தடுக்கும் வகையில் கடந்த காலங்களில் எத்தனையோ அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச்சட்டம் பிறப்பிக்க எந்த தடையும் இல்லை. மத்திய அரசு நினைத்திருந்தால் இதற்கான சட்டத்தை எப்போதோ நிறைவேற்றியிருக்கலாம் இப்போது கூட அவசரச்சட்டம் பிறப்பிக்கலாம். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக அவசர சட்டம் பிறப்பித்து, அதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தடையை நீக்கினால் போட்டிகளை நடத்த முடியும். உச்சநீதிமன்றம் விடுமுறை முடிந்து ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அதற்குள் அவசர சட்டத்தை தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தின் சார்பில் அசாதாரணமான அழுத்தம் கொடுக்காத பட்சத்தில் இது சாத்தியமில்லை. எனவே, அனைத்துக் கட்சி ஆதரவுடன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசரச் சட்டத்தை பிறப்பிக்கச் செய்ய தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதார் .

அரசியல் வாதிகளுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போகிறதா ?

 
 
அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை தாங்கமுடியாத அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் பலர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர் சங்க முன்னோடிகளான, ஓய்வுபெற்ற, நேர்மையான, திறமைவாய்ந்த அரசு அதிகாரிகளை வரும் தேர்தலில் களமிறக்கி அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க ரகசிய திட்டம் போட்டு பேசி வருவதாக பரவலாக கூறப்படுகிறது.
 
ஆண்ட, ஆண்டுகொண்டுள்ள கட்சிகளின்மேல்மக்களுக்குள்ள வெறுப்பை பயன்படுத்தி சிறிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒருபுறம் கூட்டுசேர, அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் எனத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி, “எங்களின் முதல்வர் சகாயம்” என்ற கோஷத்துடன் பேரணி நடத்த, மககள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு உழைக்கும் அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் வர மாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசு ஊழியர் சங்க முன்னோடிகளான, ஓய்வுபெற்ற, நேர்மையான, திறமைவாய்ந்த அரசு அதிகாரிகளை வரும் தேர்தலில் களமிறக்க அரசு ஊழியர் சங்கங்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிய வருகிறது.
 
இப்போதைய வெள்ளம் தமிழகத்தில் மனிதம் இன்னும் சாகவில்லை என்ற மகிழ்ச்சியோடு, இதுவரை ஆண்ட, ஆண்டு கொண்டுள்ள கரைவேட்டிகளின் கையாலாகாத்தனத்தை தோலுரித்து காட்டியதோடு, தமிழ்நாட்டு வளத்தைச் சுரண்டியதோடல்லாமல், பேரிடர் சமயங்களில் முன்யோசனையின்றி, செயலாற்றும் திறனற்ற, விளம்பரப் பிரியர்களான அறிவிலிகளையும் அடையாளம் காட்டியுள்ளது.
தன்னார்வலர்கள் செய்த நிவாரணப் பணிகளைக் கூடத் தடுத்து, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த இவர்களைக் கண்டு மனம் வெறுத்த இளைய தலைமுறையினர் சகாயம் போன்றவர்களை அரசியலுக்கு வரச்சொல்லி பேரணி நடத்துகிறார்கள்.
 
அதேபோல், அனுபவமற்ற கரைவேட்டிகளின் வெற்று அதிகாரத்திற்கு பயந்து மனசாட்சியுடன் வேலை செய்ய முடியாமல் தவித்துக் கொண்டுள் அரசு ஊழியர் சங்கங்கள், அச்சங்கங்களின் முன்னோடிகளான, நேர்மையான, திறமைவாய்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை இம்முறை தேர்தலில் களமிறங்க வைக்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
 
இதன்மூலம் ஒவ்வொரு துறையைப் பற்றியும் அறிந்துள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டால் அத்துறைகளை முன்னேற்றமடையச் செய்வதோடு மக்களுக்குத் தேவையான பணிகளை ஊக்கத்துடன் இப்போதுள்ள அரசு ஊழியர்கள்செய்ய முடியும் என அரசு ஊழியர் சங்கங்கள் யோசிக்கின்றனவாம்.
 
ஒவ்வொரு அரசு ஊழியருககும் உள்ள குடும்பம், உறவு, நட்பு போன்றவற்றை கணக்கிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், கட்சி சார்புள்ள சங்கங்கள்கூட இதன்மூலம் தங்களுக்கு நன்மையே என உணர்ந்து கொண்டதால் அவையும் கைகோர்க்கும் எனவும், மேலும் இதன்மூலம், அனைத்து துறைகளிலும் புரையோடியுள்ள லஞ்ச, லாவண்யத்தை ஒழித்து, தற்போது மேலிருந்து கீழ்வரை உள்ள அமைச்சர்கள், இடைத் தரகர்கள் போனறோருக்கு கமிஷன் தரவே முக்கால் பங்கு நிதி போவதைத் தடுத்து, கையூட்டை ஒழித்து நேர்மையான, வெளிப்படையான ஒப்பந்தங்களின்மூலம் பல்வேறு நலத் திட்டங்களையும் செம்மையாக செய்ய முடியும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் ஆலோசித்து வருவதாக பரவலாக கூறப்படுகிறது.

 

படம் !

முதல்வரை
இனி நாம்
இழிவு படத்த தேவையில்லை
அவரே
அவரை
அதிக
அசிங்க படுத்தி கொண்டார்

(எடுத்துக்காட்டு)

பாதிக்க பட்டோர்களுக்கு
வழங்க படும்
உணவு பொட்டலங்களில்
மாண்பு மிகு முதலமைச்சரின் படம்

அதை வாங்கி
தின்று விட்டு
நமது தோழர்கள்
அதை காலடியில் மிதிக்கிறார்கள்
குழந்தைகள் அசிங்கம் செய்தால்
சுத்த படுத்தவும் உபயோகிக்கிறார்கள்
பெரியவர் கள் கூட
அவசரத்து ஒதுங்க
அந்த காகிதத்தைதான் உபயோகிக்கிறார்கள்

அதை விட பெருத்த அவமானம்
அம்மா என தலையில் வைத்து கொண்டாடிய
கட்சி ஆளுங்களே
அந்த செயலை செய்வதுதான்

இதை விடவா
நாம் அந்த அம்மாவை கேவல படுத்திவிட முடியும் ?

இதயத்தில் நீ இருந்தால் !

நான்
இராணுவத்தில் சேர்ந்து
யுத்தத்தில்
எதிரி யிடம்
சிக்கி கொண்டால்
என்னை
மார்பில் சுடுங்கள் என்று
நெஞ்சை நிமிர்த்தி கொண்டு
நிற்க மாட்டேன் !
ஏனென்றால் ?
இதயத்தில்தான்
நீ இருக்கிறாய் !
எனக்கு காயப்பட்டடாலும்
பரவாயில்லை
உன்னை காயம் பட விட மாட்டேன்