இயக்குனர் மணிரத்னம் படங்களில் தாலி சென்டிமென்ட் எந்த அளவுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் இந்த விஷயம், முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொடுக்கப்படும் தலைப்பைப் போல், தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மணிரத்னம் தனது படங்களின் கதைகளில் எவ்வாறு ‘தாலி’யைப் புகுத்தியிருக்கிறார். இதோ பட்டியல்… தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் – அலைபாயுதே தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் – ஓ காதல் கண்மணி தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் – மௌன ராகம் இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் -ராவணன் தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் – கடல் ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் – நாயகன் ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் – அக்னி நட்சத்திரம் ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் – திருடா திருடா தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் – ரோஜா இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் – தளபதி இது மணிரத்னம் இயக்கும் படங்களில் இழையோடும் கதைக் கருவாகப் பார்க்கப் படுகிறது. ஆக, மெய்யாலுமே எவரேனும் முனைவர் பட்ட ஆய்வுக்கு தலைப்பு தேடினால்… இந்தத் தலைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்…. #ஜஸ்ட்ஃபார்ஃபன்
மணிரத்னம் படங்களில் ‘தாலி’
அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல – ஜீவா
காறித் துப்பிய ஜீவா – கண்டுகொள்ளாத ஈ.வெ.ரா: 1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது: தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான ‘ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ‘ என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறேன் இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸிலிரு
- கட்டுரை: நா.சடகோபன்
தி.க.வினரா? நகை திருட்டு கும்பலா?: பூணூல் அறுப்பு விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
சென்னை: வயதான அர்ச்சகர்களின் பூணூலை 6 பேர் கொண்ட கும்பல் அறுத்து தாக்கி காயப்படுத்திச் சென்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்கள் தி.க.வினரா அல்லது நகை திருட்டு கும்பலா என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை… சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் திரு.விஸ்வநாத குருக்கள் அவர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து முதியவரின் கன்னத்தில் அறைந்து அவரது கையை முறித்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவமானபடுத்தி உள்ளனர். அவரது வேட்டியையும் கழற்றி எறிந்து கோழைத்தனமான செயலை செய்துவிட்டு துணிச்சலுக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்களின் பெயரை முழங்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த நபர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களா அல்லது நகை பறிக்கும் திருட்டுக் கும்பலை சேர்ந்தவர்களா என்று சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
ஐ ஆம் வெயிடிங்… விஜய் ஸ்டைலில் கலக்கும் அனிருத்
கொலவேறி பாடலுக்கு பிறகு அனிருத்திற்கு பெரிய பிரேக் கொடுத்த படம் விஜய்யின் கத்தி. அதுவரை தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அனிருத்திற்கு பல பெரிய நடிகர்களின் படமும் கிடைத்ததுள்ளது. விக்ரம், அஜித், சூர்யா ஆகியோரின் அடுத்த படங்களுக்கு இவர்தான் இசை. அதோடு பாலிவுட் படத்திற்கும் அனிருத் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கத்தி படத்தில் விஜய் பேசும் ஐ ஆம் வெயிடிங் டயலாக்கை விஜய்யை போல் சிரித்துக்கொண்டே கோபத்துடன் கத்துவது போன்று டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் இந்த வசனத்திற்கு நான் அடிமை என்று கூறியுள்ளார் அனிருத். இது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அரியானா அரசின் அந்தஸ்தை மறுத்தார் பாபா ராம்தேவ்
அரியானா அரசால் வழங்கப்படுவதாக அறிவித்த கேபினட் அமைச்சருக்கு உண்டான அந்தஸ்தை தனக்கு வழங்க வேண்டாம் என யோகா குரு பாபா ராம்தேவ் மறுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13ல் அரியானா மாநில அரசு பாபா ராம்தேவுக்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என்றும், பாபா ராம்தேவ் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை ஊக்குவிக்க மாநில அரசின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்திருந்தது. இதனை மாநில கல்வித் துறை அமைச்சர் ராம்விலாஸ் சர்மா அறிவித்திருந்தார். இந்நிலையில், அரியானா அரசு இன்று ராம்தேவை கௌரவிப்பதற்காக பஞ்ச்குலா இந்தரதனுஷ் ஸ்டேடியத்தில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜபட்ச வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த ஆணைக்குழுத் தலைவர் சம்மதம்
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று விசாரணை நடத்த, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்துள்ளதாக, இலங்கை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபட்சவை ஏப்.24ஆம் நாள் விசாரணைக்கு ஆஜராகும்படி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியது. இது, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோஷம் இட்டனர். இதனிடையே லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் பாலபத்தபென்டியிடம் சபாநாயகர் நேற்று பேசினார். அப்போது, மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று அவரிடம் வாக்குமூலம் பெற ஆணைக் குழுத் தலைவர் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்தாராம். இருப்பினும், இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து இலங்கை சபாநாயகர் இன்று அறிவிப்பார் எனத் தெரிகிறது.
மயிலாப்பூரில் வயதான குருக்களின் பூணூலை அறுத்த 6 ‘காட்டுமிராண்டிகள்’ கைது
சென்னை: சென்னையில், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் வயதான குருக்களிடமும் பெரியவரிடமும் வீரம் காட்டி பூணூலை அறுத்துச் சென்ற காட்டுமிராண்டிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாத குருக்கள் (76) தனது மகன் சண்முக குருக்கள் பூஜை செய்யும் மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவிலை நோக்கிச் சென்றார். நேற்று இரவு 7.30 மணி அளவில் மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 மோட்டார் பைக்குகளில் வந்த காட்டுமிராண்டிகள் 6 பேர் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரை திடீரெனத் தாக்கியுள்ளனர். காட்டுமிராண்டிகளின் தாக்குதலில் நிலைகுலைந்து தடுமாறிய விஸ்வநாத குருக்களின் தோளில் கிடந்த பூணூலையும் அறுத்து எறிந்து, தந்தை பெரியார் வாழ்க என கோஷமிட்ட படி அந்தக் காட்டுமிராண்டிகள் வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து, விஸ்வநாத குருக்கள் மயிலாப்பூர் போலீஸில் தனது மகன் மங்களம் குருக்களுடன் சென்று புகார் அளித்தார். இதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுபோல், சென்னை மேற்கு மாம்பலத்தில் சந்தானகோபால் (69) என்ற வயதான பெரியவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரின் பூணூலையும் காட்டுமிராண்டிகள் சிலர் அறுத்துள்ளனர். இவர் அங்குள்ள பெருமாள் கோவிலில் பஜனை பாடுபவர். இவர் நேற்று இரவு 8.40 மணியளவில் அந்தச் சாலையில் நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு காட்டுமிராண்டி கும்பல் அவரது பூணூலை அறுத்து தப்பியது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் விஸ்வநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நந்தகுமார், பிரபாகர், திவாகர், பிரதீப், ராவணன் உள்ளிட்ட 6 காட்டுமிராண்டிகளை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாகப் பேசி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலியறுக்கும் போராட்டம் நடந்தது. அப்போது திராவிடர் கழகத்தினருக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பிலும் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திராவிடர் கழகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்றார். இது குறித்து கருத்துக் கூறிய தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா, இந்துக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் திராவிடர் கழகத்தினரின் வாசகங்களை அழிப்போம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக, பூணூல் அறுப்பு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடந்த இந்த பூணூல் அறுப்பு விவகாரம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் விசாரணை கைதி சாவு
தென்காசி கிளை சிறையில் விசாரணை கைதி மரணம் சுரண்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரை கொலை முயற்சி வழக்கில் சுரண்டை போலீசார் கைது செய்து கடந்த 18ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தென்காசி கிளை சிறையில் அடைத்தனர் ராஜ்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த ராஜ்குமார் நேற்று காலையில் சிறையில் மயங்கி விழுந்துள்ளார் சிறைக்காவலர்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார்இறந்து விட்டார் என தெரிவித்தனர் சிறையில் இருந்த விசாரணை கைதி திடீரென இறந்தது சிறைத்துறை மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்குமாரை போலீசார்தாக்கியதால் அவர் இறந்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என பிரேத பரிசோதனையில்தான் தெரிய வரும். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் தென்காசி, சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அட்சய திருதியை: அறுபது மகத்துவம்
- அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2.அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். 3.குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது. 4.கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 5.வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 6.அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். 7.அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்’ விரிவாக விவரிக்கிறது. 8.மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்ப தற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். 9.கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 10.தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 11.அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. 12.அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார். 13.அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 14.சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 15.பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார். 16.அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார். 17.ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக,மிக சிறப்பு வாய்ந்ததாகும். 18.அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். 19.வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும். 20.மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள். 21.வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். 22.அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள். 23.ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும். 24.ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். 25.அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும். 26.அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. 27.வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். 28.ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. 29.பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள். 30.அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள். 31.அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். 32.அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை” நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள். 33.அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். 34.அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும். 35.அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். 36.அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். 37.அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும். 38.அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. 39.அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. 40அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது. 41.அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம். 42.கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். 43.ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார். 44.அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. 45.அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
- அரிதான வேலையை சந்திஅப்பதை `அலப்ய யோகம்’ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
47.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்’ எனப்போற்றுவர்.
அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு
அட்சதை' என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ëறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்குஅட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.
அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்” என்றழைக் கிறார்கள்.
ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத் தால் வியா பாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
மகாலட்சுமியின் பரி பூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
- வாட்ஸ் அப், பேஸ்புக் என ஒரு சுற்று வந்துவிட்ட மகிமைச் செய்தி

