Home Blog Page 6094

கோடிக்கணக்கில் கொள்ளை போன கோயில் நிலங்கள் – கரூரில் திருத்தொண்டர்கள் சபை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில் நிலங்கள் தனியார் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து திருத்தொண்டர்கள் சபை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் கோயில் நிலங்களை மீட்பது குறித்து அரசுக்கு உத்திரவிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட ஆய்வில் லிங்கத்தூர் கைலாச நாதர் திருக்கோயில், நெரூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், திருமுக்கூடலூர் திருஅகத்தீஸ்வரர் திருகோயில் உள்ளிட்ட 15 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாகவும், இவற்றை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன். மேலும், இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என்றும், பொதுமக்கள் கோயில் நிலங்களை வாங்குவதோ, விற்பதோ சட்டபடி குற்றம் என்றும் கூறினார். 16-04-15 Karur photo

சில்லறை விற்பனையில் கால் லிட்டர் ஆவின் பாக்கெட் பால்: இன்று முதல் கிடைக்கும்

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை இன்று முதல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 250 மி.லி அளவு கொண்ட ஆவின் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் நாள் ஒன்றுக்கு 11.67 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 7.5 லட்சம் லிட்டரும், மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் 4.17 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலை, தரமான முறையில் கிடைக்கும் என்பதால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். சந்தையில் தற்போது 4 வகையான 500, 1,000 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது பிப்ரவரியில் 250 மி.லி., அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் சென்னையில், ஒவ்வொரு பகுதியாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை விரிவுபடுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது வியாழக்கிழமை இன்று முதல் சென்னை மாநகரில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும், முகவர்கள் வாயிலாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

  புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகும் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மனு மீது விசாரணை முடிந்து புதன்கிழை நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி அன்பழகனின் மனு மீதான 136 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை மூத்த நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஆர். பானுமதி ஆகியோர் தனித் தனியாக எழுதியிருந்தனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுரின் தீர்ப்பில், “ஆட்சி அதிகாரத்தின் தலையீடு போன்ற காரணங்களால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கும் அதிகாரம் அம்மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, பவானி சிங்கின் நியமனம் தவறானது என்ற அன்பழகனின் முதலாவது கோரிக்கையை ஏற்கிறேன். அதேநேரம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகனின் தரப்பு பதிலை எழுத்து பூர்வமாகத் தாக்கல் செய்ய அவர் விடுத்த மற்றொரு கோரிக்கையை நிராகரிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி ஆர்.பானுமதி எழுதிய தீர்ப்பில், “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவரது பணி முடிந்ததைக் கர்நாடக அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் சிறப்பு வழக்குரைஞராக ஆஜரானதில் தவறேதும் இல்லை. எனவே, அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரு தீர்ப்புகளும் முரண்பாடாக இருந்ததால் அன்பழகன் மனு தொடர்பாக பின்னர் இரு நீதிபதிகளும் இணைந்து பிறப்பித்த உத்தரவில், “இந்த மனுவை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குப் பரிந்துரை செய்கிறோம். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு முன்வைக்கும்படி நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம்’ என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, அன்பழகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா, “இந்த மனுவை வேறு நீதிபதிகள் அமர்வு விசாரித்து முடிக்கும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள தீர்ப்பை வெளியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதி மதன் பி.லோகுர், “அது அந்த நீதிபதியின் முடிவைப் பொருத்தது’ என்றார்.

சென்னை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி : பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதியை கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை நேற்று தொடங்கி வைத்தார். துறைமுகத்தில் கப்பல்கள் வந்து செல்வதைக் கண்காணிப்பதற்காக ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர், இந்த வசதி காமராஜர் துறைமுக வரலாற்றில் ஒரு மைல் கல். இதன் மூலம் கப்பல்கள் வந்து செல்வதை மட்டுமின்றி எண்ணெய்க் கசிவு ஏதேனும் ஏற்பட்டாலும் கண்டறிய முடியும். இரண்டு கப்பல் தளங்களுடன் தொடங்கப்பட்ட இத்துறைமுகத்தில் தற்போது ஆறு தளங்கள் உள்ளன. மேலும் இரண்டு தளங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் விரைவில் ஆண்டுக்கு 50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை இத்துறைமுகம் பெறும் என்றார்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பில் இந்திய செயல்பாடு திருப்தி அளிக்கிறது : ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்

சென்னை: இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பில் இந்தியாவின் செயல்பாடுகள் திருப்தி தருகின்றன. படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்தார். சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக சபையின் வெள்ளி விழா நிகழ்ச்சி புதன்கிழமை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் பங்கேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தமிழக முதல்வரிடம், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பாக விவாதித்தேன். இந்த விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கும் மாணவர்கள் கல்வி பயில்வது தொடர்பாக பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம், நிலக்கரி, மின் உற்பத்தி, விளையாட்டு, கல்வி, மருத்துவம் ஆகியத் துறைகளில் அதிகளவில் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளோம். குறிப்பாக, இந்தியாவில் மின் உற்பத்தித் திட்டங்களை தொடங்குவதற்கு தயாராக உள்ளோம். சீனா, ஜப்பான் போன்ற தென் கொரியா நாடுகளில். தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை பேச்சு வார்த்தை நடத்தினோம். மாறாக, இந்தியாவில் ஒரே ஆண்டில் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தத் திட்டங்களை செயல்படுத்துவோம். தமிழகத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் ஆஸ்திரேலியா பங்கேற்கும். இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து, படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வருகை புரிகின்றனர். இதுபோன்று, படகு வாயிலாக சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியேற இடம் கிடையாது. அவர்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கவும் மாட்டோம். இதுபோன்று வருவதைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும், இரு நாட்டுப் பிரதமர்களும் பரஸ்பரம் வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம், இரு நாடுகளிடையே நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, தமிழக முதல்வரையும் சந்தித்து உரையாடினேன். அப்போது, முதல்வரிடம் தமிழகத்தில் எந்த மாதிரியான தொழில் தொடங்குவது சிறந்தது என்பது குறித்து விவாதித்தேன். இந்த உரையாடலில், நல்ல பலனும், முன்னேற்றம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆஸ்திரேலியா ‘யுரேனியம்’ வழங்குவது குறித்து அணுசக்தி(civil Nuclear agreement ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நடப்பாண்டிலேயே இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இந்தியாவின் ராணுவத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா கடல் பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளது. ‘மலபார், பிட்ச் பிளாக்’ போன்ற ஆபரேஷனில் பங்கேற்பதற்கு தயாராக உள்ளோம். ஏற்கெனவே இதுபோன்ற ஆபரேஷனில் பங்கேற்றும் இருக்கிறோம். இந்தியா அணு ஆயுத ஒப்பத்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலையைக் கருத்தில் கொண்டு ஆதரவு அளிப்போம். தற்போது, இந்தியாவில் ரூ.1,500 கோடி அளவுக்கு (15 பில்லியன் அமெரிக்கா டாலர்) வர்த்தகம் செய்து வருகிறோம். இவற்றை ரூ. 4 ஆயிரம் கோடியாக(40 பில்லியன்) உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சீனாவுடன் ரூ.16 ஆயிரம் கோடி (160 பில்லியன்) அளவுக்கு வர்த்தகம் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து, இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

சத்துணவுப் பணியாளரின் 34 அம்சக் கோரிக்கையை ஏற்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சத்துணவுப் பணியாளர்களின் 34 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

06-04-15 pmk Ramadhas photo 04இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும்; பணி நிலைப்பு, ஓய்வூதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கி உள்ளனர். இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு  நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.  எந்த நேரமும் உயிர் பறிக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் வாழ்வது எவ்வளவு கொடுமையானதோ, அதவிடக் கொடுமையானது எந்த நேரம் வேலை பறிக்கப்படுமோ? என்ற அச்சத்துடன் நிச்சயமற்ற நிலையில் ஒரு வேலையை செய்வது ஆகும். இந்தக் கொடுமையைத் தான் தமிழகத்திலுள்ள சத்துணவு பணியாளர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை. காலம் காலமாக பணியாற்றி வரும் தங்களை முழு நேர  ஊழியராக்கி அதற்கேற்றவாறு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், அதிக பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை அல்ல. ஆனால், அரசு ஊழியர் நலன் காப்பதாகக் பெருமை பேசும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இவர்களை தங்களின் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவே தவிர கோரிக்கைகளை நிறைவேற்ற 30 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தை முற்றுமையிடும் போராட்டம் நடத்திய சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது காவல்துறையினரை ஏவி விட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது அப்போதைய தி.மு.க அரசு. அப்போது,‘‘ எம்.ஜி.ஆர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் என்பதால் தான் சத்துணவுப் பணியாளர்களை தி.மு.க. அரசு பழிவாங்குகிறது. அ.தி.மு.க ஆட்சி மீண்டும் இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடியுயும் நிலையில் அவர்களின் ஒரு கோரிக்கைக் கூட நிறைவேற்றப்படவில்லை. சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் துறை மாற்றமோ அல்லது பதவி நீக்கமோ செய்யப்பட்டார்களே தவிர கோரிக்கைகளை நிறைவேற்ற இப்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சத்துணவுப் பணியாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 6 மணி நேரம் வரை மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை முழுநேர ஊழியர்களாக அறிவிக்க முடியாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான வாதம் ஆகும். கிராமப்புறங்களில் உள்ள 48% தொடக்கப் பள்ளிகளிலும், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 20% தொடக்கப் பள்ளிகளிலும் தலா 2 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அவர்களில் எவரேனும் ஒருவர் விடுமுறையில் சென்றாலும் அந்த இடத்தை நிரப்பும் பணியை சத்துணவு அமைப்பாளர்கள் தான் செய்கின்றனர். சமையலர், சமையல் உதவியாளர்,  ஆகியோரும் பள்ளியை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் நிலையில் அவர்களை பகுதி நேரப் பணியாளர்கள் என்று ஒதுக்கித் தள்ளுவது சரியல்ல. சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகமிக குறைவாகும். சத்துணவு அமைப்பாளருக்கு  மாதம் ரூ.3500, சமையலருக்கு ரூ.2500, உதவியாளருக்கு ரூ.1800 என்ற அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. தினமும் 32 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என்ற மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வரையறையின்படி பார்த்தாலும், ஒரு சத்துணவுப் பணியாளரின் குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையை ஒழிப்பது தான் அரசின் கடமை என்ற நிலையில், அரசே சத்துணவுப் பணியாளர்கர் குடும்பங்களை வறுமையில் தள்ளுவது  சரியாக இருக்குமா? என்பதை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இப்போதும் கூட சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தமிழக அரசு எச்சரிப்பது அதன் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. இப்போக்கை விடுத்து சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை கருணையுடன்  பரிசீலித்து, நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய செய்திகள்

red-sanders-killed-andhra

ஆந்திர சம்பவம்: உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை

இந்தியா, சற்றுமுன்

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை’ விடுக்கப்பட்டது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, துப்பாக்கிச்சூட்டில்…

 

 

 

 

 

 

 

 

 

 

ஆந்திர சம்பவம்: உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை’ விடுக்கப்பட்டது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் ஆஜரானார். அவர் தனது வழக்குரைஞர் மூலம் தாக்கல் செய்த மனுவில், தன் கணவர் உள்ளிட்ட 6 பேரின் உடல்களை மருத்துவ நிபுணர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்தவும், அதை வீடியோவாக பதிவு செய்யவும் ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கையையும், இறப்பு தொடர்பான ஆய்வு அறிக்கையையும் ஏப்.16 வியாழக்கிழமை தாக்கல் செய்யும்படி கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஸ்ரீநிவாஸூக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை அடுத்து, இன்றும் தொடர்ந்து அந்த மனு மீது விசாரணை நடக்கிறது. முன்னதாக, ஆந்திர மாநில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தானாக வழக்குப்பதிவு செய்து, ஹைதராபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆந்திர போலீஸாரிடம் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது. கொலை வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆந்திர போலீஸாரிடம் கேட்டது. மேலும், இதுகுறித்து சந்திரகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு பாதிக்கப்பட்ட முனியம்மாளை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

2 மாத ஓய்வுக்குப் பின் தில்லி திரும்பிய ராகுல்!

rahul-gandhi புது தில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 2 மாத ஓய்வு இடைவெளிக்குப் பின்னர் ஏப்.15 நேற்று தில்லிக்குத் திரும்பியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வியட்நாம் சென்றிருந்ததாகவும், அவர் அங்கிருந்து தில்லி திரும்பியதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

isis-letter சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் சென்னையில் ஏப்ரல் 24-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் மற்றும் பிரஸ் கிளப் ஆகியவற்றுக்கு இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், சென்னையில் உள்ள 50 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்.. இவர்களில் 10 பேரை கண்டிப்பாக நாங்கள் சுட்டுக் கொல்வோம். அத்துடன் கோவையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பைப் போல வரும் 24-ந் தேதி சென்னையிலும் தொடர் குண்டுவெடிப்பு நிகழும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? உண்மையில் ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள்தான் அனுப்பினரா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் சென்னையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

red-sanders-killed-andhra ஹைதராபாத்: திருப்பதியை அடுத்த சேஷாசலம் சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ஆந்திர மாநில அரசு இதனைத் தெரிவித்தது. தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆந்திர அரசின் சார்பில் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ஏ.ஏ.ஜி.) டி. ஸ்ரீநிவாஸ் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், இந்தச் சம்பவம் தொடர்பாக இ. த. ச. பிரிவு 302 (கொலை), 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது, ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை ஆந்திர போலீஸார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான நடவடிக்கையிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்…