மனிதனை காப்பாற்றிய மிருகம்; மிருகத்தை கொன்ற மனிதன்…!

adithadi - 2026

மதுரை அருகே, வளர்ப்பு நாய் ஒன்று தன் உயிரை கொடுத்து, மர்ம கும்பலிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் வசிப்பவர் முத்துக்குமார்.

இவர், அப்பகுதியில் உள்ள செந்தில் என்பவருக்கு சொந்தமான அப்பளக் கடையில் வேலைபார்த்து வருகிறார்.

முத்துக்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

dog 1 - 2026

இந்நிலையில் நேற்று முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல், முத்துக்குமாரை தேடி பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அப்பளக் கடைக்கு சென்றனர்.

இவர்களை பார்த்த்தும் முத்துக்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனை பார்த்த செந்தில்- தமிழ்செல்வி தம்பதியினர் மர்ம கும்பலை தட்டிக்கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர்.

அவர்களிமிருந்து தப்பிக்க தம்பதி இருவரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த கும்பலில் உள்ள ஒருவன் தமிழ்செல்வியின் இடது கையில் அரிவாளால் வெட்டியதில், அவரது கை விரல்கள் துண்டானது.

dog 2 - 2026

இந்நிலையில் எஜமானவர்களை தாக்குவதை பார்த்து கோபமடைந்த அவர்களது வளர்ப்புநாய், ஆவேசத்துடன் குரைத்தபடி அந்த கும்பல் மீது பாய்ந்தது. ஆனால் அந்த கும்பல் நாய் என்று கூட பார்க்காமல் அளிவாளால் வெட்டியுள்ளனா். இதில், வயிற்றில் வெட்டு விழுந்து குடல் சரிந்த நாய், துடிதுடித்து இறந்தது.

இதனிடையே சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வர, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

செந்தில், அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

dog 3 - 2026

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த விஜய் (22), ஹரி (19), பிரவீன் பாலா (18), சிவா (19), சாகிர் உசேன் (19) மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

தலைமறைவான விக்னேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

எனவே காவல்துறையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தி இதுபோன்ற குற்றசம்பவங்கள் நேராமல் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories