கிணறை தூர்வாரி பயன்பாட்டிற்கு வழிசெய்த இளைஞர்கள் !

well 3 - 2026
file pic

திட்டக்குடி அருகே பாழடைந்த கிணற்றைச் சீரமைத்து இளைஞர்கள், அதை மழைநீர் சேகரிக்க தக்கதாக தயார்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று முன்வந்து திட்டக்குடி வட்டம், சிறுப்பாக்கம் கிராம இளைஞர்கள் செயலாற்றியுள்ளன்ர்.

collector - 2026
file pic

இந்தப் பகுதியில் நெசவாளர்களின் பயன்பாட்டுக்காக தோண்டப்பட்ட கிணறு ஒன்று பல்வேறு காரணங்களால் தூர்ந்துபோனது. இதைக் கண்ட இளைஞர்கள், கிணற்றை தூர்வாரி மழைநீரைச் சேகரிக்கப் பயன்படுத்தினால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதோடு, அந்தப் பகுதியையும் பசுமையாக மாற்றலாம் என்று திட்டமிட்டனர்.

இதையடுத்து, கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு தங்களால் இயன்ற அளவில் ரூ.25 ஆயிரம் வரை நிதி திரட்டினர். மேலும், தங்களது உழைப்பையும் அளிக்க முன்வந்தனர். இதனால் சுமார் 9 அடிக்கு ஆழத்துக்கு கிணறு தூர்வாரப்பட்டது. பின்னர், மழைநீர் வழிந்தோடும் வகையில் ஏற்கெனவே இருந்த வழிப் பாதைகளையும் சீரமைத்தனர்.

மழைநீரை அப்படியே கிணற்றுக்குள் விட்டால் கரை பலவீனப்படும் என்பதால், தமிழ்க்காடு அமைப்பினரின் ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக மற்றொரு பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை தேக்கி அங்கிருந்து கிணற்றில் தண்ணீர் விடும் வகையில் ஏற்பாடு செய்தனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இவர்களது இந்த முயற்சி சில நாள்களிலேயே பலனை அடைந்தது. அண்மையில் அந்தப் பகுதியில் மழை பெய்த நிலையில், இளைஞர்கள் சீரமைத்த வாய்க்கால்களின் வழியாக மழைநீர் வழிந்தோடி கிணற்றை அடைந்தது.

இதுகுறித்து கிராம இளைஞர்கள் கூறியதாவது: ஊரின் மையப் பகுதியிலிருந்த சேதமடைந்த கிணற்றை தூர்வாரினோம். அதில் தற்போது மழைநீர் தேங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் கிணற்றை மேலும் 15 அடிக்கு தூர்வாரவும், அதைச் சுற்றி 4 ஏக்கரில் மரக் கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories