கிணறை தூர்வாரி பயன்பாட்டிற்கு வழிசெய்த இளைஞர்கள் !

well 3 - 2026
file pic

திட்டக்குடி அருகே பாழடைந்த கிணற்றைச் சீரமைத்து இளைஞர்கள், அதை மழைநீர் சேகரிக்க தக்கதாக தயார்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று முன்வந்து திட்டக்குடி வட்டம், சிறுப்பாக்கம் கிராம இளைஞர்கள் செயலாற்றியுள்ளன்ர்.

collector - 2026
file pic

இந்தப் பகுதியில் நெசவாளர்களின் பயன்பாட்டுக்காக தோண்டப்பட்ட கிணறு ஒன்று பல்வேறு காரணங்களால் தூர்ந்துபோனது. இதைக் கண்ட இளைஞர்கள், கிணற்றை தூர்வாரி மழைநீரைச் சேகரிக்கப் பயன்படுத்தினால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதோடு, அந்தப் பகுதியையும் பசுமையாக மாற்றலாம் என்று திட்டமிட்டனர்.

இதையடுத்து, கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு தங்களால் இயன்ற அளவில் ரூ.25 ஆயிரம் வரை நிதி திரட்டினர். மேலும், தங்களது உழைப்பையும் அளிக்க முன்வந்தனர். இதனால் சுமார் 9 அடிக்கு ஆழத்துக்கு கிணறு தூர்வாரப்பட்டது. பின்னர், மழைநீர் வழிந்தோடும் வகையில் ஏற்கெனவே இருந்த வழிப் பாதைகளையும் சீரமைத்தனர்.

மழைநீரை அப்படியே கிணற்றுக்குள் விட்டால் கரை பலவீனப்படும் என்பதால், தமிழ்க்காடு அமைப்பினரின் ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக மற்றொரு பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை தேக்கி அங்கிருந்து கிணற்றில் தண்ணீர் விடும் வகையில் ஏற்பாடு செய்தனர்.

இவர்களது இந்த முயற்சி சில நாள்களிலேயே பலனை அடைந்தது. அண்மையில் அந்தப் பகுதியில் மழை பெய்த நிலையில், இளைஞர்கள் சீரமைத்த வாய்க்கால்களின் வழியாக மழைநீர் வழிந்தோடி கிணற்றை அடைந்தது.

இதுகுறித்து கிராம இளைஞர்கள் கூறியதாவது: ஊரின் மையப் பகுதியிலிருந்த சேதமடைந்த கிணற்றை தூர்வாரினோம். அதில் தற்போது மழைநீர் தேங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் கிணற்றை மேலும் 15 அடிக்கு தூர்வாரவும், அதைச் சுற்றி 4 ஏக்கரில் மரக் கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories