பாகிஸ்தானியர்கள் – ஆபத்தான அச்சுறுத்தல்கள்! இந்தியர்கள் – ஒழுக்கமானவர்கள்: ஒப்பிட்ட துபை அதிகாரி!

Published:

dhahi khalfan facebook - 2026
  • துபையின் உயர் பாதுகாப்பு அதிகாரி பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டார்.
  • பாகிஸ்தானியர்கள் வளைகுடா சமூகங்களுக்கு “ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று அவர் கூறினார்.

துபையில் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டு, பாகிஸ்தானியர்கள் “வளைகுடா சமூகங்களுக்கு ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று கூறினார்.

துபையில் போதைப்பொருள் மோசடி சோதனையின் போது, துபை பொது பாதுகாப்புத் தலைவர் தாஹி கல்பான், வளைகுடா நாடுகளுக்குள் பாகிஸ்தானியர்கள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டி அரபு மொழியில் தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டார்.

துபை முன்னாள் போலீஸ் படைத் தலைவரான கல்பன், தனது நாட்டிலுள்ள மக்களுக்கு “பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவது அவர்களின் “தேசியக் கடமை” என்று அவர் கூறினார்.

அவரது டிவீட்களில், மேலும் சூழலை மோசமாக்கும் விதத்தில், இந்தியர்கள் ஒழுக்கமானவர்கள், அவர்களுக்கு வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கல்பான் கூறினார் (அச்சச்சோ!).

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

சந்தடி சாக்கில், பங்களாதேஷை சேர்ந்தவர்களையும் ஒரு தாக்கு தாக்கியுள்ளார் கல்பான்! பாகிஸ்தானியர்கள் ‘தங்கள் குற்றப் போக்குகளின் காரணமாக’ பங்களாதேஷியர்கள் செய்வது போன்ற விரிவான பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

துபை பாதுகாப்பு அதிகாரியின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்கிஸ்தானிய செய்தித்தாள் டானில் ஓர் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

அதில், “மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருக்கும் பாகிஸ்தானியர்களின் குற்றச் செயல்களை நிரூபிக்கும் அரசாங்க தரவுகளும் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img